India
அணுசக்தித் துறையில் தனியாருக்கு அனுமதி... அமெரிக்காவின் முடிவால் சட்டத்திருத்தம் கொண்டுவரும் ஒன்றிய அரசு?
இந்தியாவில் அணுசக்தி துறையை அரசுத் துறைகள் மட்டுமே கையாண்டு வருகின்றன. தேசிய அணுமின் கழகம், தேசிய அனல்மின் கழகம் ஆகிய இரண்டு நிறுவனங்கள் மட்டுமே அணுசக்தியை கையாண்டு வருகின்றன.
இந்தத் துறையில் உள்நாட்டு, வெளிநாட்டு தனியார் நிறுவனங்களை அனுமதிக்க ஒன்றிய அரசு தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அணுசக்தி தொடர்புடைய உபகரணங்களை உற்பத்தி செய்யவும், வடிவமைப்பு பணிகளை தொடங்கவும் அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.
அதன்படி அந்த நாட்டு நிறுவனங்களை இந்தியாவில் அனுமதிக்க அமெரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதனை தொடர்ந்து தனியார் நிறுவனங்களை அணு சக்தி துறையில் அனுமதிக்கும் வகையில் புதிய சட்ட திருத்தத்திற்கு ஒன்றிய அரசு தயாராகி வருகிறது.
அதன்படி 1962 ஆம் ஆண்டு அணுசக்தி சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மழைக்கால கூட்டத்தொடரில் இதற்கான இரண்டு மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!