India
நிறுத்தப்பட்ட தாக்குதல்கள்.. இயல்பு நிலை திரும்பும் பாகிஸ்தான் எல்லையோர மாநிலங்கள் !
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கடந்த மாதம் 22-ம் தேதி தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் உள்ளிட்ட 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் இந்தியா பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் ஏராளமான தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து இரு நாடுகளும் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தியதால் போர் பதற்றம் ஏற்பட்டது. பாகிஸ்தானின் 3 போர் விமானங்களை சுட்டு வீழ்த்திய இந்தியா, பாகிஸ்தானின் ராவல்பிண்டி, கராச்சி, இஸ்லாமாபாத் போன்ற முக்கிய நகரங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதனிடையே மாலை 5 மணி அளவில் இரு தரப்பும் தாக்குதலை நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்திருந்தார்.ஆனால் இரவு 8.30 மணி அளவில் பாகிஸ்தான் ராணுவம் சிறிய ரக பீரங்கிகளை வைத்து இந்திய எல்லை பகுதியில் தாக்குதல் நடத்தியது.
அதனைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு இந்தியா தரப்பில் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக அடுத்தடுத்து எந்த தாக்குதலும் நடைபெறாத நிலையில், எல்லை மாநிலங்களில் சிவப்பு எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது. அதோடு அங்கு இயல்பு நிலை திரும்பி வருவது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
தமிழ்நாட்டை பின்பற்றும் கர்நாடகா... அரசு பேருந்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இலவச பயணம் !
-
6 மாவட்டங்களில் விளையாட்டுக்காக முக்கிய திட்டங்கள்.. அடிக்கல் நாட்டினார் துணை முதலமைச்சர் - விவரம்!
-
தமிழ்நாட்டின் பக்கம் நிற்காமல், டெல்லிக்குத் துணைபோகிறார் பழனிசாமி- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் !
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!