India
'ஒரு பிராமணரோ'... சாதிய உணர்வை தூண்டும் வகையில் பேச்சு : சுரேஷ் கோபிக்கு வலுக்கும் கண்டனம்!
டெல்லியில் நானை மறுநாள் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, ஒன்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது பேசிய சுரேஷ் கோபி, "பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே பழங்குடியினர் நலத்துறைக்கான அமைச்சராக முடியும் என்பது நமது நாட்டின் சாபக்கேடு. இத்துறைக்குப் உயர்சாதியைச் சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் .
ஒரு பிராமணரோ அல்லது நாயுடுவோ இந்த துறைக்குப் பொறுப்பேற்றால், பழங்குடியினர் நலத்துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்” எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, சுரேஷ் கோபியின் இந்த பேச்சு இணையத்தில் சர்ச்சையைக் கிளப்பியது. குறிப்பாக அவரது சொந்த மாநிலமான கேரளாவில் இது மிகப் பெரிய விவகாரமாக வெடித்துள்ளது.
கேரளா சிபிஐ மாநிலச் செயலாளர் பெனாய் விஸ்வம், ”சுரேஷ் கோபி சாதிய கட்டமைப்பைப் பாதுகாக்கவே இதுபோல பேசுவதாகவும் அவரை அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார். வேறு பல தலைவர்களும் சுரேஷ் கோபியின் கருத்தைக் கடுமையாக விமர்சித்தனர்.
தனது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியதைத் உணர்ந்த அமைச்சர் சுரேஷ் கோபி தனது கருத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!