India
முல்லைப் பெரியாறு அணை : ஏழு உறுப்பினர்கள் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை அமைத்து ஒன்றிய அரசு உத்தரவு !
தமிழ்நாட்டின் தேனி, மதுரை பகுதி மக்களின் முக்கிய நீர் ஆதாரங்கள் வழங்கும் அணையாக முல்லைப் பெரியாறு அணை திகழ்ந்து வருகிறது. இந்த அணி கேரளாவில் அமைந்துள்ள நிலையில், இந்த அணை கண்காணிப்பு குழுவின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
முல்லைப் பெரியாறு அணைக்கான கண்காணிப்பு குழு அமைக்கப்படாமல் இருந்த நிலையில், தற்போது ஏழு உறுப்பினர்கள் கொண்ட புதிய கண்காணிப்பு குழுவை அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த குழு அணை பாதுகாப்பு சட்டப்படி அமைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. .
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் முல்லைப் பெரியாறு கண்காணிப்பு குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், காவிரி தொழில்நுட்பக் குழு தலைவர் ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.
கேரளா சார்பில் கூடுதல் தலைமைச் செயலாளர், தலைமை பொறியாளர் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களுடன் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் அணைகள் ஆய்வு அதிகாரி ஒருவரும் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!