India
DJ இசைக்கு நடனமாடிய இளைஞர் : சோகத்தில் முடிந்த திருமண வரவேற்பு - நடந்தது என்ன?
கர்நாடகா மாநிலம், மொளகாலமுரு தாலுகாவுக்கு உட்பட்ட பகடலபண்டே என்ற கிராமத்தில் நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆதர்ஷ் என்ற 23 வயது இளைஞர் பங்கேற்றுள்ளார்.
இந்த திருமண வரவேற்பு நிகழ்வில் DJ இசைக்கு ஆதர்ஷ் நடனமாடிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவர் சுருண்டு கீழே விழுந்துள்ளார். பிறகு அங்கிருந்தவர்கள் அவரை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர். இதைகேட்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிகழ்ச்சியில் நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் நடனமாடும் போது மாரடைப்பால் உயிரிழப்பு ஏற்படும் சம்பவம் அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!