India
”நாடாளுமன்றம் இயங்குவதையே விரும்பாத பா.ஜ.க” : மஹுவா மொய்த்ரா MP குற்றச்சாட்டு!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவ.25-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் இரண்டாம் நாளான நேற்று, அரசியலமைப்பு சட்டத்தின் 75-வது தினக்கொண்டாட்டம் அனுசரிக்கப்பட்டது. அப்போது நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றினார்.
அப்போது குடியரசுத்தலைவரின் உரையில், "சோசலிஸ்ட்" மற்றும் "மதச்சார்பற்ற" என்ற சொற்கள் உட்பட அரசியலமைப்பின் சில முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்படவில்லை. இந்த விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியது. ஏற்கனவே இந்த கூட்டத்தொடரில் மக்களுக்கு விரோதமான வக்ப் வாரியம் திருத்தச்சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்டவைக்கான சட்டமசோதாவை நிறைவேற்ற ஒன்றிய பா.ஜ.க அரசு துடிக்கிறது.
அதோடு அதானி முறைகேடு குறித்தும் விவாதம் நடத்த எதிர்க்கட்சிகளின் தொடர் கோரிக்கையை ஒன்றிய அரசு மறுத்து வருகிறது. இதனால் கடந்த இரண்டு நாட்களாகவே நாள் முழுவதும் அவையை ஒன்றிய அரசு விவாதம் நடத்தாமல் ஒத்திவைத்தது. இன்றும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நாடாளுமன்றம் இயங்குவதை பாஜக விரும்பவில்லை என திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எம்.பி. மஹுவா மொய்த்ரா குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ”எதிர்க்கட்சியின் வேலை என்ன? நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை முன் வைப்பதுதான் எதிர்க்கட்சியின் வேலை. அதற்குதான் நாடாளுமன்றம் இருக்கிறது.
மணிப்பூர், சம்பல், அதானி ஊழல், விலைவாசி உயர்வு என எதிர்க்கட்சியான நாங்கள் எதை பேசக் கேட்டாலும் அவர்கள் அனுமதி மறுக்கிறார்கள். நாட்டின் முக்கியமான பிரச்சினைகளை இருட்டடிப்பு செய்கிறார்கள். நாடாளுமன்ற அவைகள் இயங்க பா.ஜ.க அரசாங்கம் விரும்பவில்லை” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!