India
”காற்று மாசு குறித்து விரிவான விவாதம் தேவை” : எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை!
டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து அதிகரித்து காணப்படுவதால் அம்மாநில மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். கடந்த ஒருவாரமாகவே காற்று தரக் குறியீடு 400க்கும் அதிகமாகவே பதிவாகியுள்ளது.
இதனால் அம்மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டு ஆன்லைனில் வகுப்புகள் நடத்த முதல்வர் அதிஷி மர்லினா வலியுறுத்தியுள்ளார். அதேபோல், ஒன்றிய அரசு அலுவலங்களின் நேரமும் மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. கூடுமானவரை வீட்டில் இருந்து பணியாற்றவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், காற்று மாசு குறித்து விரிவாக விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கோரிக்கை விடுத்துள்ளார்.
காற்று மாசு குறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுத்துள்ள ராகுல் காந்தி, ”சுத்தமான காற்றுக்காக குடும்பங்கள் மூச்சுத் திணறுகின்றனர். குழந்தைகள் நோய்வாய்ப்படுகிறார்கள். ஏழைக் குடும்பங்கள் நச்சுக் காற்றில் இருந்து தப்பிக்க முடியாமல் மிகவும் அவதிப்படுகிறார்கள்.
காற்று மாசு விவகாரத்தில் அரசியல் விளையாட்டுகள் இருக்கக்கூடாது. கூட்டுமாசுவை போக்க அரசாங்கங்கள், நிறுவனங்கள், நிபுணர்கள் மற்றும் பொதுமக்கள் என ஒரு கூட்டு முயற்சி தேவை.
இன்னும் சில நாட்களில் நாடாளுமன்றம் கூடுகிறது. அப்போது எம்.பி.க்கள் அனைவருக்கும் கண்கள் எரிச்சல் மற்றும் தொண்டை வலி நினைவுக்கு வரும். காற்று மாசால் ஏற்படும் இந்த நெருக்கடியை எப்படி முடிவுக்கு கொண்டுவருவது என்று ஒன்று கூடி விவாதிப்பது நமது பொறுப்பாகும்.” என வலியுறுத்தியுள்ளார்.
Also Read
-
ஒன்றிய - மாநில உறவுக : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!
-
இந்திய அளவிலான சிறப்பு கட்டமைப்புகளை பெற்று வரும் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை: அமைச்சர் மா.சு. பெருமிதம்!
-
பா.ஜ.க-வை விமர்சிக்க தைரியம் இருக்கிறதா? : விஜய்க்கு டி.கே.எஸ்.இளங்கோவன் கேள்வி!