India
”விமானத்தை கண்டுபிடித்தது இவர்தான், ரைட் சகோதரர்கள் அல்ல” : ஆளுநர் ஆனந்திபென் படேல் பேச்சு!
உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில் உள்ள குவாஜா மொய்னுதீன் சிஷ்டி மொழி பல்கலைக்கழகத்தின் 9-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், அம்மாநில ஆளுநர் ஆனந்திபென் படேல் பங்கேற்றார்.
இந்நிகழ்சியில் பேசிய அவர், பண்டைய இந்தியாவின் முனிவர்கள் மற்றும் அறிஞர்களின் கண்டுபிடிப்புகள் இன்று உலகிற்கு நன்மை செய்து வருகிறது. அப்படிதான் தான் பரத்வராஜ் என்ற முனிவர்தான் விமானம் பறக்கும் தத்துவத்தை கண்டுபிடித்தார். இதற்கான ஆதாரங்கள் ராமாயணம் மற்றும் மகாபாரதம் நூல்களில் உள்ளது.
ஆனால் விமானம் பறக்கும் தத்துவத்தை கண்டுபிடித்தது ரைட் சகோதரர்கள் என்று அங்கீகரிக்கப்பட்டுள்ளது. நமது பண்டைய கண்டுபிடிப்புகளை தாங்கள் கண்டுபிடித்ததாக மேலைநாட்டினர் கூறிவருகிறார்கள். எனவே மாணவர்கள் பண்டைய இந்திய நூல்களை ஆராய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அறிவியலுக்கு எதிராக பல்கலைக்கழகத்தில் பேசிய ஆளுநர் ஆனந்திபென் படேலுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்புகளை பதிவு செய்து வருகிறார்கள்.
Also Read
-
தென்மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த கனமழை... ஆட்சித் தலைவர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை !
-
பருவமழையை எதிர்கொள்ள மின்சாரத்துறை தயார்... பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கிய அமைச்சர் சிவசங்கர் !
-
Elimination-ல் 5 பேர்! வெளியேறபோவது அப்சராவா? கமருதீனா? திக்திக் தருணங்களால் பரபரப்பாகும் BB வீடு!
-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் “என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி” பயிற்சிக் கூட்டம் : எப்போது?
-
திராவிடம் என்றால் என்ன என்றே தெரியாது என்றவர்தான் எடப்பாடி பழனிசாமி - அமைச்சர் சிவசங்கர் விமர்சனம் !