India
டெல்லியில் போதைப் பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை! : 24 மணிநேரத்தில் 700 பேர் கைது!
டெல்லியில் போதைப்பொருள் புழக்கம், அண்மையில் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், டெல்லி காவல்துறையினரால் அதிரடி சோதனை முன்னெடுக்கப்பட்டது.
அவ்வகையில், டெல்லியின் 15 மாவட்டங்களில் 24 மணிநேர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 1,225 காவலர்கள் நடத்திய சோதனைகளில், போதைப்பொருட்கள் விற்பனை செய்த 700க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, “போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோரை கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 245 கிலோ கஞ்சா, 870 கிராம் ஹெராயின், 434 கிராம் எம்.எம்.டி.ஏ மற்றும் 16 கிராம் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என டெல்லி காவல் கண்காணிப்பாளர் தேவேஷ் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, போதைப்பொருட்களுடன் 6 நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பிடிபட்டன என டெல்லி காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Also Read
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!