India
டெல்லியில் போதைப் பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை! : 24 மணிநேரத்தில் 700 பேர் கைது!
டெல்லியில் போதைப்பொருள் புழக்கம், அண்மையில் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், டெல்லி காவல்துறையினரால் அதிரடி சோதனை முன்னெடுக்கப்பட்டது.
அவ்வகையில், டெல்லியின் 15 மாவட்டங்களில் 24 மணிநேர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 1,225 காவலர்கள் நடத்திய சோதனைகளில், போதைப்பொருட்கள் விற்பனை செய்த 700க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, “போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோரை கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 245 கிலோ கஞ்சா, 870 கிராம் ஹெராயின், 434 கிராம் எம்.எம்.டி.ஏ மற்றும் 16 கிராம் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என டெல்லி காவல் கண்காணிப்பாளர் தேவேஷ் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, போதைப்பொருட்களுடன் 6 நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பிடிபட்டன என டெல்லி காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Also Read
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!