India
டெல்லியில் போதைப் பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை! : 24 மணிநேரத்தில் 700 பேர் கைது!
டெல்லியில் போதைப்பொருள் புழக்கம், அண்மையில் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், டெல்லி காவல்துறையினரால் அதிரடி சோதனை முன்னெடுக்கப்பட்டது.
அவ்வகையில், டெல்லியின் 15 மாவட்டங்களில் 24 மணிநேர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 1,225 காவலர்கள் நடத்திய சோதனைகளில், போதைப்பொருட்கள் விற்பனை செய்த 700க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, “போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோரை கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 245 கிலோ கஞ்சா, 870 கிராம் ஹெராயின், 434 கிராம் எம்.எம்.டி.ஏ மற்றும் 16 கிராம் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என டெல்லி காவல் கண்காணிப்பாளர் தேவேஷ் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, போதைப்பொருட்களுடன் 6 நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பிடிபட்டன என டெல்லி காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Also Read
-
“SIR பணிக்கு ஒரு வார கால நீட்டிப்பு என்பது திமுக-வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!” : என்.ஆர்.இளங்கோ!
-
சிவகங்கை பேருந்து விபத்து! : ஆறுதல் மற்றும் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன!” : அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு!
-
“டிட்வா புயலையொட்டி சென்னையில் 22 ஆயிரம் பேர் பணியில் ஈடுபட்டுள்ளனர்!” : சென்னை மாநகராட்சி தகவல்!