India
டெல்லியில் போதைப் பொருட்களுக்கு எதிராக அதிரடி சோதனை! : 24 மணிநேரத்தில் 700 பேர் கைது!
டெல்லியில் போதைப்பொருள் புழக்கம், அண்மையில் அதிகரிக்கத் தொடங்கிய நிலையில், டெல்லி காவல்துறையினரால் அதிரடி சோதனை முன்னெடுக்கப்பட்டது.
அவ்வகையில், டெல்லியின் 15 மாவட்டங்களில் 24 மணிநேர சோதனை நடத்தப்பட்டது. சுமார் 1,225 காவலர்கள் நடத்திய சோதனைகளில், போதைப்பொருட்கள் விற்பனை செய்த 700க்கும் மேற்பட்டோர் சிக்கினர்.
இதனைத் தொடர்ந்து, “போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்ட 700க்கும் மேற்பட்டோரை கைது செய்து, பதுக்கி வைக்கப்பட்டிருந்த 245 கிலோ கஞ்சா, 870 கிராம் ஹெராயின், 434 கிராம் எம்.எம்.டி.ஏ மற்றும் 16 கிராம் கொக்கைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன” என டெல்லி காவல் கண்காணிப்பாளர் தேவேஷ் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, போதைப்பொருட்களுடன் 6 நாட்டு துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களும் பிடிபட்டன என டெல்லி காவல்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
Also Read
-
”பழனிசாமி என்ற அசிங்கத்தை அரசியலில் இருந்தே துடைத்தெறிய வேண்டும்” : சீர்காழியில் முதலமைச்சர் சூளுரை!
-
”தமிழ்நாட்டிற்கே அறிவுரையா? இங்கே வாருங்கள் கற்றுத்தருகிறோம்!” - தி.க.தலைவர் ஆசிரியர் கி.வீரமணி பதிலடி!
-
TN Election 2026 : CNN செய்தி பெயரில் போலி கருத்துக்கணிப்பு... அ.தி.மு.க பரப்பிய பொய் செய்தி அம்பலம்!
-
“200 தொகுதிகளைத் தாண்டி நாங்கள் வெற்றி பெறுவோம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு பேட்டி!
-
திராவிட மாடல் ஆட்சியின் 5 ஆண்டுகளில் தொழில் உற்பத்தி 82.6% அசுர வளர்ச்சி! : முழு விவரம் உள்ளே!