India
வயநாட்டில் வேட்புமனு தாக்கல்! : முதன்முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா காந்தி!
இந்தியாவின் முதல் பிரதமர் நேருவில் தொடங்கி, காந்தி குடும்பத்தினர் அனைவரும் காங்கிரஸில் பல பொறுப்பு வகித்தவர்களாக இருக்கின்றனர்.
நேருவின் மகள் இந்திரா காந்தி, இந்தியாவின் முதல் பெண் பிரதமராக விளங்கினார். அவரின் மகன் ராஜீவ் காந்தியும் பிரதமர் பதவி வகித்தவரே.
இவர்கள் வரிசையில், ராஜீவ் காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, தனது 17 வயது முதல் காங்கிரஸின் பல்வேறு தலைவர்களுக்கான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
கிழக்கு உத்தரப் பிரதேச காங்கிரஸ் பொதுச்செயலாளராக ஓராண்டு காலம் பொறுப்பு வகித்த பிரியங்கா காந்தி, 2020ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், தனது சகோதரர் ராகுல் காந்தி, 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும், 2024 மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்டு வென்ற வயநாடு மக்களவைத் தொகுதியில், தனது அரசியல் வாழ்வில் முதன்முறையாக போட்டியிடுகிறார் பிரியங்கா காந்தி.
காங்கிரஸ் நிர்வாகியாக பலமுறை தேர்தலைக் கண்ட பிரியங்கா காந்தி, முதன்முறையாக தேர்தலை வேட்பாளராக களம் காண இருப்பதால், இந்திய அளவில் எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளன.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!