India
“அரசியல்வாதிகளை புகழ்வது, நீதித்துறை மீதான நம்பிக்கையை குறைக்கிறது” : நீதிபதி பி.ஆர்.கவாய் கண்டனம்!
குஜராத் உயர்நீதிமன்றத்தின் சார்பில், நீதித்துறை நிர்வாகிகளுக்காக முன்னெடுக்கப்பட்ட இரு நாள் கருத்தரங்கில், உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
அப்போது நாட்டில் நிலவுகிற பல்வேறு சிக்கல்களையும், அதனை நீதித்துறைகள் கையாளும் விதத்தினையும் எடுத்துரைத்து, பல்வேறு நெறிமுறைகளை நீதித்துறையினரிடையே விளக்கினார்.
அவர் பேசியதாவது, “இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு கட்சியின் கீழ் ஆட்சி நடப்பது மட்டுமே, மக்களாட்சியாகிட முடியாது. அம்பேத்கரின் வழியில், இந்திய அரசியலமைப்பின் வழியில், அனைத்து குடிமக்களின் உரிமைகளையும் பாதுகாப்பதே, உண்மையான மக்களாட்சி.
இதனை நிறைவேற்றுகிற பொறுப்பு, அரசியல் சார்பற்ற நீதித்துறைக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட நீதித்துறையினர், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஆதரவான கருத்துகளை முன்மொழிவதும், அரசியல்வாதிகளை புகழ்வதும், தான் வகிக்கும் பதவியிலிருந்து விலகி, தேர்தலில் போட்டியிடுவதும், நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை சீர்குலைக்கும்.
மேலும், பெண்கள் மீதும், அல்லது குறிப்பிட்ட சமூகத்தினர் மீதும் கண்டிக்கத்தக்க விமர்சனங்களை முன்வைப்பது, இந்திய அரசியலமைப்பிற்கு முற்றிலும் எதிரானது. அது போன்ற நடவடிக்கைகளை அறவே தவிர்த்திட வேண்டும்” என்றார்.
Also Read
-
சென்னையில் நாளை 13 இடங்களில் “உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாம் : இடங்கள் குறித்த விவரம் உள்ளே !
-
”இளைஞர்களின் வெற்றியை உறுதி செய்திடுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
சென்னை மெட்ரோ ரயிலுக்கு நாளுக்கு நாள் ஆதரிக்கும் பொதுமக்களின் ஆதரவு : ஆகஸ்ட்டில் 99.09 லட்சம் பேர் பயணம்!
-
திராவிட மாடல் அரசு நிதி வீணாகவில்லை : Köln பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்ட முதலமைச்சர்!
-
ஆசிரியர் தகுதித் தேர்வு கட்டாயம் : உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!