India
பாலியல் குற்றவாளிகளின் புகலிடம் பா.ஜ.க : 6 வயது மாணவி கொலை வழக்கில் காங்கிரஸ் குற்றச்சாட்டு!
குஜராத்தில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜ.க ஆதரவாளர் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷக்திசிங் கோஹில் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷக்திசிங் கோஹில், "குஜராத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர், தனது காரில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூரமான செயலை செய்தவர் தன்னை ஒரு சமூக சீர்த்திருத்த வாதி என்றும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவாகவும் தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளார்.
குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் இதுபோன்று நடந்தால் பா.ஜ.க வாய்திறக்கிறது. ஆனால் இப்போது பா.ஜ.கவினரும் பிரதமர் மோடியும் அமைதியாக உள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.கவினர் கைதாகி இருக்கிறார்கள். பா.ஜ.க யுவமோர்ச்சா பொதுச் செயலாளர் கௌரவ், சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
பா.ஜ.க தலைவர் ஆகாஷ் பகவான் பாய், திருமணமான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாலியல் குற்றவாளிகளின் பகலிடமாக பா.ஜ.க கட்சி உள்ளது. குற்றவாளிகள் எல்லோரும் பா.ஜ.க உறுப்பினர்களாக இருக்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!