India
பாலியல் குற்றவாளிகளின் புகலிடம் பா.ஜ.க : 6 வயது மாணவி கொலை வழக்கில் காங்கிரஸ் குற்றச்சாட்டு!
குஜராத்தில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜ.க ஆதரவாளர் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷக்திசிங் கோஹில் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷக்திசிங் கோஹில், "குஜராத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர், தனது காரில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூரமான செயலை செய்தவர் தன்னை ஒரு சமூக சீர்த்திருத்த வாதி என்றும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவாகவும் தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளார்.
குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் இதுபோன்று நடந்தால் பா.ஜ.க வாய்திறக்கிறது. ஆனால் இப்போது பா.ஜ.கவினரும் பிரதமர் மோடியும் அமைதியாக உள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.கவினர் கைதாகி இருக்கிறார்கள். பா.ஜ.க யுவமோர்ச்சா பொதுச் செயலாளர் கௌரவ், சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
பா.ஜ.க தலைவர் ஆகாஷ் பகவான் பாய், திருமணமான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாலியல் குற்றவாளிகளின் பகலிடமாக பா.ஜ.க கட்சி உள்ளது. குற்றவாளிகள் எல்லோரும் பா.ஜ.க உறுப்பினர்களாக இருக்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
“மக்களைத் திரட்டி வீதியில் இறங்கி போராடவும் தி.மு.க தயங்காது!” : த.வெ.க அரசுக்கு உதயநிதி எச்சரிக்கை!
-
தமிழகத்தை உலுக்கிய கும்மிடிப்பூண்டி 3 வயது வடமாநில சிறுமி வன்கொடுமை.. வேடிக்கை பார்க்கும் சிங்கப்பெண் படை
-
“நாடாளுமன்றத் தேர்தலின்போது மட்டும் ஆதரவைத் தேடுவதற்கு வெட்கமாக இல்லையா?” : காங்கிரசை சாடிய முரசொலி!
-
“இருளகற்றும் ஒளி சூரியனிடம்தான் உண்டு!” : திராவிட முன்னேற்றக் கழகம் சூளுரை!
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!