India
பாலியல் குற்றவாளிகளின் புகலிடம் பா.ஜ.க : 6 வயது மாணவி கொலை வழக்கில் காங்கிரஸ் குற்றச்சாட்டு!
குஜராத்தில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த பள்ளி தலைமை ஆசிரியர் பா.ஜ.க ஆதரவாளர் என அம்மாநில காங்கிரஸ் தலைவர் ஷக்திசிங் கோஹில் குற்றம்சாட்டியுள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஷக்திசிங் கோஹில், "குஜராத்தில் இரண்டு நாட்களுக்கு முன்பு பள்ளி தலைமை ஆசிரியர், தனது காரில் 6 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது சிறுமி கத்தியதால் அவரது கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார்.
இந்த கொடூரமான செயலை செய்தவர் தன்னை ஒரு சமூக சீர்த்திருத்த வாதி என்றும் பா.ஜ.க மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர் என்றும் கூறியிருக்கிறார். மேலும் இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவாகவும் தேர்தலில் பிரச்சாரம் செய்துள்ளார்.
குஜராத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளது. பா.ஜ.க ஆட்சி செய்யாத மாநிலங்களில் இதுபோன்று நடந்தால் பா.ஜ.க வாய்திறக்கிறது. ஆனால் இப்போது பா.ஜ.கவினரும் பிரதமர் மோடியும் அமைதியாக உள்ளனர்.
பாலியல் வன்கொடுமை வழக்கில் பா.ஜ.கவினர் கைதாகி இருக்கிறார்கள். பா.ஜ.க யுவமோர்ச்சா பொதுச் செயலாளர் கௌரவ், சிறுமியை பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார்.
பா.ஜ.க தலைவர் ஆகாஷ் பகவான் பாய், திருமணமான பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து பாலியல் வன்கொடுமை செய்து கொலை மிரட்டல் விடுத்துள்ளார். பாலியல் குற்றவாளிகளின் பகலிடமாக பா.ஜ.க கட்சி உள்ளது. குற்றவாளிகள் எல்லோரும் பா.ஜ.க உறுப்பினர்களாக இருக்கிறார்கள்” என குற்றம்சாட்டியுள்ளார்.
Also Read
-
சென்னையில் COOP-A-THON மினி மாரத்தான் போட்டி.. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய அமைச்சர்கள் !
-
“மனித குலத்துக்கே செய்கின்ற ஒரு மாபெரும் தொண்டு!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!
-
தினமலரின் பொய் செய்தி! - அங்கன்வாடி மையங்கள் குறித்து விளக்கிய தமிழ்நாடு அரசு!
-
சிறப்புத் திட்ட செயலாக்கத் துறையின் மாபெரும் சாதனைகள்... பட்டியலை வெளியிட்டு தமிழ்நாடு அரசு பெருமிதம்!
-
இந்தி திணிப்பு : "பாஜகவுக்கு தமிழ்நாடு மறக்க முடியாத பாடத்தை மீண்டுமொருமுறை கற்பிக்கும்" - முதலமைச்சர் !