India
வீட்டிற்குள் புகுந்து iPhone-ஐ எடுத்துச் சென்ற குரங்கு : பதறியடித்து பின் தொடர்ந்த உரிமையாளர்!
கர்நாடக மாநிலம், பெங்களூரு தொட்டபல்லாபூரின் துாபகெரே கிராமத்தில் குரங்குகளின் அதிகமாக உள்ளது. கூட்டம் கூட்டமாக வரும் குரங்குகள் வீட்டிற்குள் புகுந்து கையில் கிடைத்த பொருட்களை எடுத்துக் கொண்டு சென்றுவிடுகின்றன. இது அப்பகுதி மக்களுக்கு பெரும் அவதியாக இருந்து வருகிறது.
இந்நிலையில், குரங்கு ஒன்று வீட்டிற்குள் சார்ஜ் போட்டிருந்த iPhone-ஐ எடுத்துக் கொண்டு அப்பகுதியில் இருந்த மொபைல் டவர் மீது ஏறியது. இதைப்பார்த்த அதன் உரிமையாளர் கவலையடைந்தார்.
பின்னர் குரங்கிடம் இருந்து செல்போனை வாங்க அப்பகுதி மக்கள் முயற்சி செய்த அனைத்தும் தோல்வியடைந்தது. பிறகு ஒரு கட்டத்தில் இவர்கள் சோர்வடைந்ததை அறிந்த குரங்கு செல்போனை கீழே வீசி எறிந்து அங்கிருந்து சென்றது.
செல்போன் கீழே விழுந்ததில் டிஸ்ப்ளே உடைந்தது. பிறகு செல்போன் கிடைத்த நிம்மதியில் அதன் உரிமையாளர் வீட்டிற்கு சென்றார். குரங்குகளின் தொல்லை குறித்து புகார் அளித்தும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறார்கள்.
Also Read
-
“இதுதான் மாற்றம்! இதுதான் வளர்ச்சி! திராவிட மாடல் 2.O-ல் இது பன்மடங்காகும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
மருத்துவப் படிப்பில் Sports Quota... MBBS, BDS இட ஒதுக்கீட்டை அதிகரித்து அரசு அனுமதி.. - விவரம் உள்ளே!
-
100 அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு நிதியுதவி ஒப்பளிப்பு அரசாணை! : அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்!
-
“எப்போது ‘எய்ம்ஸ்’ மருத்துவமனை மக்கள் பயன்பாட்டிற்கு வரும்?” : தி.மு.க எம்.பி.க்கள் கேள்வி!
-
இல்லம் தேடி கல்வி 2.0 முதல் தமிழ்நாடு AI வரை.. மாநில திட்டக் குழு தயாரித்த 15 ஆய்வறிக்கை சொல்வது என்ன?