India
இஸ்லாமிய மக்களை அவமதித்த விவகாரம் : பகிரங்க மன்னிப்பு கேட்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி!
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பெண் வழக்க றிஞரிடம்,”கோரிபால்யாவில் இருந்து மார்க்கெட் வரை உள்ள மைசூரு மேம் பாலம் பாகிஸ்தானில் உள்ளது. அது இந்தியாவில் இல்லை என்பதால் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், உத்தரவு பிறப்பிக்கவும் பொருந்தாது” என அவர் கூறினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புற நகர் பகுதியான கோரிபால்யா முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி என்ற நிலையில், அந்த பகுதியை “பாகிஸ்தான்” பகுதி என நீதிபதி ஸ்ரீஷானந்தா கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு கண்டனம் தெரிவித்து,”கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இந்நிலையில், சனியன்று மதியம் நீதி மன்ற நடவடிக்கைகள் தொடங்கும் நீதிபதி ஸ்ரீஷானந்தா,”நீதித்துறையின் நடவடிக்கையின் போது சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கு மாறாக செய்தியாக்கப்பட்டிருக்கிறது.
அந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கத் தில் தெரிவிக்கப்பட்டது இல்லை. அந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமூகத்தின் எந்த வொரு பிரிவினரையோ காயப்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
Also Read
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!
-
“கழக அரசு மீது களங்கம் ஏற்படுத்த நினைத்தால் அதனைப் பெண்களே ஏற்க மாட்டார்கள்!” : முரசொலி தலையங்கம்!