India
இஸ்லாமிய மக்களை அவமதித்த விவகாரம் : பகிரங்க மன்னிப்பு கேட்ட கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி!
கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா நிலம் தொடர்பான வழக்கு விசாரணையின் போது பெண் வழக்க றிஞரிடம்,”கோரிபால்யாவில் இருந்து மார்க்கெட் வரை உள்ள மைசூரு மேம் பாலம் பாகிஸ்தானில் உள்ளது. அது இந்தியாவில் இல்லை என்பதால் இது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவும், உத்தரவு பிறப்பிக்கவும் பொருந்தாது” என அவர் கூறினார்.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புற நகர் பகுதியான கோரிபால்யா முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி என்ற நிலையில், அந்த பகுதியை “பாகிஸ்தான்” பகுதி என நீதிபதி ஸ்ரீஷானந்தா கூறியது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தானாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அமர்வு கண்டனம் தெரிவித்து,”கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் உரிய விவரங்களை பெற்று, உச்சநீதிமன்ற தலைமை பதிவாளர் அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இந்நிலையில், சனியன்று மதியம் நீதி மன்ற நடவடிக்கைகள் தொடங்கும் நீதிபதி ஸ்ரீஷானந்தா,”நீதித்துறையின் நடவடிக்கையின் போது சில கருத்துக்கள் சமூக ஊடகங்களில் சொல்லப்பட்ட கருத்துக்கு மாறாக செய்தியாக்கப்பட்டிருக்கிறது.
அந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தின் எந்த ஒரு பிரிவினரையோ புண்படுத்தும் நோக்கத் தில் தெரிவிக்கப்பட்டது இல்லை. அந்த கருத்துக்கள் எந்த ஒரு தனிநபரையோ, சமூகத்தையோ, சமூகத்தின் எந்த வொரு பிரிவினரையோ காயப்படுத்தியிருந்தால், நான் மனப்பூர்வமாக எனது வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்” என பகிரங்க மன்னிப்புக் கோரினார்.
Also Read
-
“இவை தீர்மானங்கள் மட்டுமல்ல! ஒன்றிய பா.ஜ.க அரசின் மீதான குற்றப்பத்திரிக்கை!” : முரசொலி தலையங்கம்!
-
“SIR பணிக்கு ஒரு வார கால நீட்டிப்பு என்பது திமுக-வின் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி!” : என்.ஆர்.இளங்கோ!
-
சிவகங்கை பேருந்து விபத்து! : ஆறுதல் மற்றும் நிவாரணம் அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“சிந்தனையிலும் செயலிலும் மாற்றம் இல்லையெனில், இதுவும் தேவையற்றதே!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“திண்டுக்கல்லில் சுமார் 22,000 வாக்குகள் நீக்கப்பட்டுள்ளன!” : அமைச்சர் இ.பெரியசாமி குற்றச்சாட்டு!