India
ரயிலில் சிறுமிக்கு பாலியல் தொல்லை... ரயில்வே ஊழியரை அடித்துக் கொன்ற பயணிகள் : பீகாரில் கொடூரம் !
பீகாரில் இருந்து டெல்லிக்கு செல்லும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு குடும்பத்தினர் தங்கள் 11 வயது மகளுடன் சென்றுகொண்டிருந்துள்ளனர். அப்போது ரயிலில் கூட்டமாக இருந்ததால் அந்த 11 வயது சிறுமியை ரயில்வே ஊழியரான பிரசாந்த் குமார் என்பவர் தனது அருகே அமரவைத்துள்ளார்.
சிறிது நேரத்தில் சிறுமியின் அருகில் நின்றுகொண்டிருந்த சிறுமியின் தாயார் கழிவறைக்கு சென்றுள்ளார். இதனை பயன்படுத்திகொண்ட ரயில்வே ஊழியர் பிரசாந்த் தனது அருகில் அமர்ந்திருந்த மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து அந்த சிறுமி கழிவறையில் இருந்து வெளியே வந்த தனது தாயாரிடம் கூறி கதறி அழுதுள்ளார். அதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை ரயில்வே ஊழியர் பிரசாந்திடம் இது குறித்தி ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.
இதற்குள் நடந்ததை அறிந்த சக பயணிகள் ஒன்று கூடி, ரயில்வே ஊழியர் பிரசாந்தை தாக்கியுள்ளனர். நெடுநேரம் தாக்கப்பட்ட ரயில்வே ஊழியர் பிரசாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். பின்னர் அங்கு வந்த ரயில்வே காவல்துறை அதிகாரிகள் ரயில்வே ஊழியர் பிரசாந்தின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பீகாரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“மேயர் பிரியா மீது அவதூறு.. Protocol-ஐ தெரிந்து கொள்ளுங்கள்.. MLA பல்லவிக்கு சபாநாயகர் கொடுத்த பதிலடி”
-
அம்மோனியா வாயு கசிவால் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்க வேண்டும் : பேரவையில் தி.மு.க வலியுறுத்தல்!
-
அம்மோனியா வாயுக் கசிவு விவகாரம்: சட்டப்பேரவையில் எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதிக்காத சபாநாயகர்!
-
“Faceless People எனும் ஆவணப்படத்தைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
Delimitation : நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய ஒன்றிய பா.ஜ.க அரசு புதிய திட்டம்!