India
Mobile Hotspot-ஐ பகிர மறுத்த நபருக்கு நேர்ந்த கொடூரம் : புனேவில் அதிர்ச்சி சம்பவம்!
மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன் குல்கர்னி. இவர் நிதி நிறுவன ஏஜெண்ட்டாக உள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிறன்று இரவு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத நான்கு இளைஞர்கள் அவரை வழிமறித்து மொமைல் ஹாட்ஸ்பாட்டை பகிர வலிறுத்தியுள்ளனர். ஆனால் அவர் ஹாட்ஸ்பாட்டை பகிரி மறுத்துள்ளார். இதனால் இருவர்களுக்கும் இடையே வாக்குவாதம் முற்றியுள்ளது.
இதில் ஆவேசம் அடைந்த இளைஞர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து ராமச்சந்திர குல்கர்னியை குத்தியுள்ளனர். சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்ததை அடுத்து இளைஞர்கள் அங்கிருந்த தப்பிச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து போலிஸார் வழக்கு பதிவு செய்து மயூர் மோசாலே என்ற இளைஞரையும் 3 சிறுவர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?
-
“மனிதநேயமற்ற கொடூரமான படுகொலை” : பெ.சண்முகம் கடும் கண்டனம்!
-
”கோவை சிறுமி கொலை.. கேள்விக்குறியான மாநில சட்டம் ஒழுங்கு.. நீதி வேண்டும்”: எதிர்க்கட்சித் தலைவர் கண்டனம்!
-
”தமிழ்நாட்டை உலுக்கிய கோவை சிறுமி கொலை.. சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. மவுனத்தில் முதல்வர் விஜய்!”