India
உத்தரகாண்ட் : மாணவிக்கு சமூக வலைதளத்தில் ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை... ஆசிரியருக்கு போலீசார் வலைவீச்சு!
பாஜக ஆளும் உத்தரகாண்டின் ஹல்த்வானி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு, அவரது ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு படிக்கும் மாணவிக்கு, அவரது வாட்சப் மற்றும் Snapchat சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்து, உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டதும் அதிர்ந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தனர்.
மேலும் பள்ளி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த ஆசிரியரை போலீசார் தேடி வரும் நிலையில், விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?