India
உத்தரகாண்ட் : மாணவிக்கு சமூக வலைதளத்தில் ஆபாச படங்கள் அனுப்பி தொல்லை... ஆசிரியருக்கு போலீசார் வலைவீச்சு!
பாஜக ஆளும் உத்தரகாண்டின் ஹல்த்வானி பகுதியில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு அந்த பகுதியை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த சூழலில் இங்கு 10-ம் வகுப்பு படிக்கும் 16 வயது மாணவிக்கு, அவரது ஆசிரியர் ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு படிக்கும் மாணவிக்கு, அவரது வாட்சப் மற்றும் Snapchat சமூக வலைதளத்தில் ஆபாச புகைப்படங்களை அனுப்பியுள்ளார். இதனை கண்ட மாணவி அதிர்ச்சியடைந்து, உடனடியாக தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதனை கேட்டதும் அதிர்ந்த பெற்றோர், உடனடியாக இதுகுறித்து போலீசிடம் புகார் அளித்தனர்.
மேலும் பள்ளி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அந்த ஆசிரியரை போலீசார் தேடி வரும் நிலையில், விரைவில் கைது செய்யப்படுவார் என்று போலீசார் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read
-
நேபாளத்தில் திடீர் வெள்ளப் பெருக்கு! : 105 இந்தியர்கள் மாயமானதால் பரபரப்பு!
-
சுற்றி கிடக்கும் மதுபாட்டில்கள்.. அரசு மருத்துவமனையில் அவலம்! - வீடியோவால் அதிர்ச்சி!
-
ஆசிரியர்கள் தகுதித் தேர்வு விலக்கு தீர்மானம் : அரசின் உண்மை முகம் எது? - அன்பில் மகேஸ் கேள்வி!
-
கிரிக்கெட் விளையாடியபோது ... இளைஞருக்கு ஏற்பட்ட சோகம் : நடந்தது என்ன?
-
பரந்தூர் ரத்துக்குப் பின் இருக்கும் சதிகள் : தமிழ்நாட்டின் வளர்ச்சி மீது நடத்தப்பட்ட சர்ஜிக்கல் ஸ்டிரைக்!