India
”கிரிக்கெட் விளையாட்டின் மிகப்பெரிய லெஜண்ட்” : ICC தலைவராக ஜெய் ஷா தேர்வு - பிரகாஷ்ராஜ் கிண்டல்!
வாரிசு அரசியல் பற்றி வாய் கிழிய பேசும் ஒன்றிய அமைச்சர் அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா தான் BCCI செயலாளர். தேசிய அளவில் ஒருபோட்டிக்கூட விளையாடாத ஜெய் ஷா எப்படி BCCI செயலாளராக தேர்வு செய்யப்பட்டார் என்ற கேள்விகள் அப்போது எழுந்தது.
தற்பேது ICC தலைவராக ஜெய் ஷா போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவருக்கு கிரிக்கெட் வீரர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கூட அமித்ஷாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ICC தலைவராக ஜெய்ஷா தேர்வு செய்யப்பட்டதற்கு பிரபல நடிகர் பிரகாஷ்ராஜ் விமர்சித்துள்ளார். அவரது சமூகவலைதள பதிவில், "பேட்ஸ்மேனாகவும் பவுலராகவும் விக்கெட் கீப்பராகவும் ஈடு இணையற்ற ஆல் ரவுண்டராகவும் கிரிக்கெட்டுக்கு இந்தியா
உருவாக்கி தந்திருக்கும் ஓர் அற்புதமான, பெருமைக்குரிய திறமையாளர் தற்போது ICC தலைவராக, அதுவும் போட்டியின்றி, தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நாம் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுத்து நம் பாராட்டுகளை தெரிவிப்போம்" என கிண்டல் அடித்துள்ளார்.
Also Read
-
சென்னை மாநிலக் கல்லூரி வளாகத்தில் 2000 பேர் அமரக்கூடிய வகையில் “முத்தமிழறிஞர் கலைஞர் அரங்கம்”!
-
தமிழ்நாடு முழுவதும் ரூ.655 கோடியில் 19 புதிய திட்டப் பணிகள் : அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
-
இந்தியாவிலேயே முதன் முறை : சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த Super Tree Tower!
-
இந்தி திணிப்பு : “நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்...” - பட்டியலிட்டு முதலமைச்சர் கண்டனம்!
-
கர்தவ்ய த்வார்.. மீண்டும் மீண்டும் இந்தி.. எத்தனை முறை அடித்தாலும் திருந்தாத பாஜக - கொந்தளித்த தலைவர்கள்!