India
மருத்துவ கலந்தாய்வு பொதுப்பிரிவு என்பது அனைவருக்கானதும் தான் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் இணைய, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவது போல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5% இடஒதுக்கீடு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மருத்தவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டிலும், பொதுப்பிரிவிலும் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்தது.
இதனைத் தொடர்ந்து, வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு எதிராக மத்தியப் பிரதேச தன்னார்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதனை விசாரணைக்கு எடுத்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, “மெட்ரிக் மதிப்பெண் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் பொதுப்பிரிவில் பங்கு கொள்ள உரிமை உள்ளது” என உத்தரவிட்டனர்.
மேலும், “SC, ST, OBC பிரிவுகளையும் உள்ளடக்கியது தான் பொதுப்பிரிவு. இதனை, ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது” என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Also Read
-
மீண்டும் அதிகாரப் போட்டி... தொடரும் கோஷ்டி மோதல்கள் – அதிமுகவின் உட்கட்சி மோதல் வரலாறு!
-
“விஜய்க்கு என் அன்புநிறை வாழ்த்துகளையும், ஆலோசனைகளையும் வழங்கினேன்!” : தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தி.மு.க தலைவர் இல்லத்திற்கு நேரில் சென்ற முதலமைச்சர் விஜய்! : ஆரத்தழுவி வரவேற்ற மு.க.ஸ்டாலின்!
-
த.வெ.க.வின் 107 எம்.எல்.ஏ.க்களில் 41 பேர் மீது வழக்கு : வெளியான அதிர்ச்சி ஆய்வறிக்கை!
-
மறந்துட்டியா..?! - வெற்றி சான்றிதழை மறந்த தவெக பெண் அமைச்சர்.. பதவியேற்காமல் அனுப்பி வைக்கப்பட்ட சோகம்!