India
மருத்துவ கலந்தாய்வு பொதுப்பிரிவு என்பது அனைவருக்கானதும் தான் : உச்சநீதிமன்றம் திட்டவட்டம்!
தமிழ்நாட்டில் மருத்துவப் படிப்பில் இணைய, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்கப்படுவது போல, மத்தியப் பிரதேச மாநிலத்தில் 5% இடஒதுக்கீடு கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்டது.
இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தில் மருத்தவப் படிப்புகளுக்கான கலந்தாய்வில், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உள்ள இடஒதுக்கீட்டிலும், பொதுப்பிரிவிலும் SC, ST மற்றும் OBC பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு வலுத்தது.
இதனைத் தொடர்ந்து, வாய்ப்பு மறுக்கப்படுவதற்கு எதிராக மத்தியப் பிரதேச தன்னார்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
அதனை விசாரணைக்கு எடுத்த, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி. ஆர். கவாய், கே.வி. விஸ்வநாதன் தலைமையிலான அமர்வு, “மெட்ரிக் மதிப்பெண் உள்ள அனைத்து மாணவர்களுக்கும், மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வின் பொதுப்பிரிவில் பங்கு கொள்ள உரிமை உள்ளது” என உத்தரவிட்டனர்.
மேலும், “SC, ST, OBC பிரிவுகளையும் உள்ளடக்கியது தான் பொதுப்பிரிவு. இதனை, ஏற்கனவே உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது” என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!