India
விபத்தில் சிக்கிய இளம்பெண்... உதவுவது போல ஆட்டோவில் ஏற்றி பாலியல் வன்கொடுமை : பெங்களுருவில் அதிர்ச்சி !
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள HSR லேஅவுட் பகுதியில் தனியார் கேளிக்கை விடுதி கல்லூரி மாணவி தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அங்கு பார்ட்டி செய்த அவர், நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார். இதனால் அந்த மாணவி போதையில் இருந்துள்ளார்.
பின்னர் பார்ட்டி முடிந்ததும் போதையில் வெளியே வந்த மாணவி தனது இருசக்கர வாகனத்தில் தனியே வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது போதையில் இருந்ததால் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தோடு கீழே விழுந்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, அந்த பகுதியில் இருந்த ஆட்டோ ஓட்டுநர் இதனை கண்டு இளம்பெண் தனியே இருப்பதை அறிந்து தனது நண்பர்களுக்கு இது குறித்து கூறியுள்ளார். சிறிது நேரத்தில் ஆட்டோ ஓட்டுநரின் நண்பர்களும் அங்கு வந்துள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணுக்கு உதவி செய்வது போல அவரை ஆட்டோவில் ஏற்றி அந்த பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளனர். அதனைத் தொடர்ந்து அந்த பெண் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
அதன்படி வழக்கு பதிவு செய்த போலீசார் குற்றவாளிகளை 5 தனிப்படைகள் அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், அந்த பெண் கர்நாடகாவை சேர்ந்தவர் கிடையாது என்றும், வேறு மாநிலத்தை சேர்ந்தவர் என்றும் போலிஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Also Read
-
சென்னையில் நீர் மெட்ரோ திட்டம்... முதற்கட்ட பணிகள் தொடக்கம் : செயல்படுத்தப்படும் 53 கி.மீ நீள பாதை என்ன?
-
மழைநீரைச் சேமிப்பதில் தீவிரம் காட்டும் சென்னை மாநகராட்சி... 4 ஆண்டுகளில் 70 குளங்கள் புனரமைப்பு !
-
"அதானி, அம்பானிக்கு செய்ததை போல திருப்பூர்,கோவையைக் காப்பாற்ற மோடி செய்தது என்ன?" - முரசொலி கேள்வி !
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!