India
அதிகாரியின் சேரில் அமர்ந்த குரங்கு... சல்யூட் அடித்து மரியாதை செய்த உ.பி. அயோத்தி போலீஸ் - வைரல்!
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ளது ராமஜென்மபூமி காவல் நிலையம். இங்கு தேவேந்திர குமார் என்ற காவல் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். பெரிய அதிகாரியான இவர், கடந்த ஆக 15-ம் தேதி கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே அதிகாரி தேவேந்திர குமாரின் நாற்காலியில் குரங்கு ஒன்று அமர்ந்திருந்துள்ளது. அந்த குரங்கை அதிகாரி கண்டவுடன் அதனை விரட்டாமல், அதற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். ஒரு மேலதிகாரி, குரங்குக்கு மரியாதை செலுத்தியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அயோத்தியில் இராமர் கோயில் அமைந்திருப்பதால் அந்த குரங்கை கடவுள் போல் நினைத்து அந்த குரங்கை ஒரு காவல் அதிகாரியே சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உயர் காவல் அதிகாரி, குரங்குக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
SAAF தொடரில் பதக்கம் வென்று அசத்திய தமிழர்கள்.. ரூ.40.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கி துணை முதல்வர் பாராட்டு!
-
பூட்டான் சுகாதார அமைச்சகத்தில் பணிபுரிய செவிலியர்களுக்கு வேலைவாய்ப்பு.. விண்ணப்பிப்பது எப்படி? - விவரம்!
-
தேர்தல் ஆணையத்தின் SIR... பாஜக, அதிமுக தவிர்த்த தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு !
-
"இந்த ஆண்டு 1 லட்சத்து 98 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது" - தஞ்சாவூர் ஆட்சியர் !
-
"நேரடி நியமனம் : "ஒன்றிய அரசின் களங்கம் கற்பிக்கும் முயற்சி வெற்றி பெறாது" - அமைச்சர் KN நேரு விளக்கம் !