India
அதிகாரியின் சேரில் அமர்ந்த குரங்கு... சல்யூட் அடித்து மரியாதை செய்த உ.பி. அயோத்தி போலீஸ் - வைரல்!
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ளது ராமஜென்மபூமி காவல் நிலையம். இங்கு தேவேந்திர குமார் என்ற காவல் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். பெரிய அதிகாரியான இவர், கடந்த ஆக 15-ம் தேதி கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே அதிகாரி தேவேந்திர குமாரின் நாற்காலியில் குரங்கு ஒன்று அமர்ந்திருந்துள்ளது. அந்த குரங்கை அதிகாரி கண்டவுடன் அதனை விரட்டாமல், அதற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். ஒரு மேலதிகாரி, குரங்குக்கு மரியாதை செலுத்தியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அயோத்தியில் இராமர் கோயில் அமைந்திருப்பதால் அந்த குரங்கை கடவுள் போல் நினைத்து அந்த குரங்கை ஒரு காவல் அதிகாரியே சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உயர் காவல் அதிகாரி, குரங்குக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!