India
அதிகாரியின் சேரில் அமர்ந்த குரங்கு... சல்யூட் அடித்து மரியாதை செய்த உ.பி. அயோத்தி போலீஸ் - வைரல்!
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ளது ராமஜென்மபூமி காவல் நிலையம். இங்கு தேவேந்திர குமார் என்ற காவல் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். பெரிய அதிகாரியான இவர், கடந்த ஆக 15-ம் தேதி கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே அதிகாரி தேவேந்திர குமாரின் நாற்காலியில் குரங்கு ஒன்று அமர்ந்திருந்துள்ளது. அந்த குரங்கை அதிகாரி கண்டவுடன் அதனை விரட்டாமல், அதற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். ஒரு மேலதிகாரி, குரங்குக்கு மரியாதை செலுத்தியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அயோத்தியில் இராமர் கோயில் அமைந்திருப்பதால் அந்த குரங்கை கடவுள் போல் நினைத்து அந்த குரங்கை ஒரு காவல் அதிகாரியே சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உயர் காவல் அதிகாரி, குரங்குக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
இளம் அரசு பணியாளர்கள் : 9801 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
“தமிழ்நாட்டின் எதிர்காலம் இளம் அரசுப் பணியாளர்களிடம் தான் இருக்கிறது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!