India
அதிகாரியின் சேரில் அமர்ந்த குரங்கு... சல்யூட் அடித்து மரியாதை செய்த உ.பி. அயோத்தி போலீஸ் - வைரல்!
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் அயோத்தியில் அமைந்துள்ளது ராமஜென்மபூமி காவல் நிலையம். இங்கு தேவேந்திர குமார் என்ற காவல் அதிகாரி ஒருவர் பணியாற்றி வருகிறார். பெரிய அதிகாரியான இவர், கடந்த ஆக 15-ம் தேதி கொண்டாடப்பட்ட சுதந்திர தினத்தை முன்னிட்டு, தேசிய கொடி ஏற்றி விட்டு தனது அறைக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கே அதிகாரி தேவேந்திர குமாரின் நாற்காலியில் குரங்கு ஒன்று அமர்ந்திருந்துள்ளது. அந்த குரங்கை அதிகாரி கண்டவுடன் அதனை விரட்டாமல், அதற்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்தினார். ஒரு மேலதிகாரி, குரங்குக்கு மரியாதை செலுத்தியது தொடர்பான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அயோத்தியில் இராமர் கோயில் அமைந்திருப்பதால் அந்த குரங்கை கடவுள் போல் நினைத்து அந்த குரங்கை ஒரு காவல் அதிகாரியே சல்யூட் அடித்து மரியாதை செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு உயர் காவல் அதிகாரி, குரங்குக்கு சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய விவகாரம் பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பியுள்ளது.
Also Read
-
”SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
“தவெக அமைச்சர் சரத்குமார் பதவி விலக வலியுறுத்தி.. திமுக மாணவரணி போராட்டம்.. ஸ்தம்பித்த தமிழ்நாடு”
-
மதிமுகவின் வரலாறு அறிந்தவர்கள் திமுகவினர்.. So நீங்க போய் விசில் அடிங்க.. -மதிமுகவுக்கு சிவசங்கர் பதிலடி!
-
விஜய்க்கு சொந்தப் புத்தி இல்லை என்பதற்கு இதுவே சாட்சி... வெளுத்து வாங்கிய முரசொலி!