India
5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும்... பேரம் பேசி லஞ்சம் கேட்ட உ.பி. போலீஸ்... ஆடியோ வெளியானதால் அதிர்ச்சி !
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் கன்னௌஜ் என்ற பகுதியில் துணை ஆய்வாளராக ராம் கிரிபால் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவரது காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் தொடர்பான வழக்கு இருந்துள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக அந்த . துணை ஆய்வாளர் ராம், விவசாயியிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த லஞ்சம் கேட்டது தொர்பான ஆடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 2 நிமிடம் இருக்கும் அந்த ஆடியோவில், விவசாயியிடம் அந்த போலீஸ், 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்கிறார். ஆனால் தன்னால் 5 கிலோ கொடுக்க முடியாது என்றும், தான் மிகவும் வறுமையில் இருப்பதால் 2 கிலோ கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த போலீஸ், முதலில் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் பேரம் பேசி, இறுதியில் 3 கிலோவுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், துணை ஆய்வாளர் ராம் கிரிபால் விவசாயியிடம் லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பலரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைத்த நிலையில், துணை ஆய்வாளர் ராம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, உருளைக்கிழங்கு என்பது பணத்திற்கான Code Word என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
”முதல்வர் விஜயின் போலீஸ் ராஜ்யம்.. உத்திரபிரேதசத்தை நினைவுபடுத்தும் கோவை சம்பவம்” : முரசொலி தலையங்கம்!
-
“தமிழ்நாடா, உத்தரபிரதேசமா? 15 நாள்.. 25 கொலைகள், 4 இரட்டைக் கொலைகள்” : எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி!
-
”தவெக ஆட்சியில் குற்றவாளிகளின் கூடாரமாக தமிழ்நாடு.. வாய் திறப்பாரா முதல்வர் விஜய்?” : முரசொலி விமர்சனம்!
-
”மேகதாது அணை உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது.. இப்போதாவது வாய் திறப்பாரா முதல்வர்” : கே.என்.நேரு கேள்வி!
-
தமிழ்நாடெங்கும் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக இளைஞரணி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட 9 தீர்மானங்கள் என்ன?