India
5 கிலோ உருளைக்கிழங்கு வேண்டும்... பேரம் பேசி லஞ்சம் கேட்ட உ.பி. போலீஸ்... ஆடியோ வெளியானதால் அதிர்ச்சி !
பாஜக ஆளும் உத்தர பிரதேசத்தின் கன்னௌஜ் என்ற பகுதியில் துணை ஆய்வாளராக ராம் கிரிபால் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இந்த சூழலில் இவரது காவல் நிலையத்தில் விவசாயி ஒருவர் தொடர்பான வழக்கு இருந்துள்ளது. இந்த சூழலில் இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக அந்த . துணை ஆய்வாளர் ராம், விவசாயியிடம் லஞ்சம் கேட்டுள்ளார்.
இந்த லஞ்சம் கேட்டது தொர்பான ஆடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 2 நிமிடம் இருக்கும் அந்த ஆடியோவில், விவசாயியிடம் அந்த போலீஸ், 5 கிலோ உருளைக்கிழங்கு கேட்கிறார். ஆனால் தன்னால் 5 கிலோ கொடுக்க முடியாது என்றும், தான் மிகவும் வறுமையில் இருப்பதால் 2 கிலோ கொடுக்க முடியும் என்று கூறியுள்ளார்.
இதற்கு அந்த போலீஸ், முதலில் மறுப்பு தெரிவித்து வந்த நிலையில் பேரம் பேசி, இறுதியில் 3 கிலோவுக்கு ஒப்புக்கொண்டுள்ளார். இந்த நிலையில், துணை ஆய்வாளர் ராம் கிரிபால் விவசாயியிடம் லஞ்சம் கேட்டது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து பலரும் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை வைத்த நிலையில், துணை ஆய்வாளர் ராம் தற்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
தொடர்ந்து அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, உருளைக்கிழங்கு என்பது பணத்திற்கான Code Word என்று தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
“அமலாக்கத்துறை நடத்தும் அவதூறுப் பிரச்சாரத்தை சட்டப்படி எதிர்கொள்வேன்” : அமைச்சர் கே.என்.நேரு பதிலடி!
-
தேசிய நீர் & நீர் பாதுகாப்பில் பொதுமக்கள் பங்களிப்பு விருதுகள்.. முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர்கள் வாழ்த்து!
-
23 சட்டமன்ற தொகுதிகளில் சிறு விளையாட்டு அரங்கங்கள்.. கட்டுமானப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் முதல்வர்!
-
ரூ.98.92 கோடி செலவில் மேம்படுத்தப்பட்ட மீன்பிடி துறைமுகங்கள் திறப்பு : 68,300 மீனவர்கள் பயன்!
-
கள்ளக்குறிச்சி : பெற்றோரை இழந்துவாடும் 4 குழந்தைகளையும் அரவணைத்துக் கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!