India
இவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா? : ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றத்தின் கருத்து என்ன?
பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் என்.ஜி.ஆச்சார்யா கல்லூரி செயல்பட்டு வருகிறது. இக்கல்லூரியில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம்,”மாணவிகளின் அடிப்படை உரிமையை பறிப்பதாக இதைக் கருத முடியாது” தீர்ப்பு வழங்கியது.
பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மாணவிகள் மேல்முறையீடு செய்தனர். இவ்வழக்கு உச்சநீதி மன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், ”இஸ்லாமியப் பெண்கள் என்ன உடை அணிந்து வரவேண்டும் என்பதை அவர்களே முடிவு செய்ய வேண்டும். அந்த சுதந்திரத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும். இஸ்லாமியப் பெண்களை ஹிஜாப் அணிந்து வரக்கூடாது எனச் சொல்வது போல், மற்ற பெண்களை பொட்டு வைக்கக் கூடாது, திலகம் வைக்கக் கூடாது என்று உங்களால் சொல்ல முடியுமா? அவற்றை உங்களால் தடை செய்ய முடியுமா?” என கல்லூரி நிர்வாகத்திற்கு கேள்வி எழுப்பினர்.
அதேநேரம், ஹிஜாப் அணிவதைத் தடை செய்யும் சுற்றறிக்கைக்கு மட்டுமே உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.மேலும் ஹிஜாப் ஆடைகளை மாணவி கள் அணிந்துவர விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!