India
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் குளறுபடி : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 92 மனுக்கள் தாக்கல்!
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல், பல்வேறு சர்ச்சை நிகழ்வுகளுடன் நடந்து முடிந்தது.
பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பா.ஜ.க நிர்வாகிகளும், பா.ஜ.க.வினர் தொடர்புள்ளவர்கள் பலரும், தேர்தல் வாக்குச்சாவடிகளை விளையாட்டுக்களமாக கையாண்டதும், இணையத்தில் வெகுவாக பரவியது.
இது குறித்து, தேசிய அளவில் பல்வேறு விமர்சனங்கள் குவிந்தும், தேர்தல் ஆணையம் பல நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தது சர்ச்சையானது.
இந்நிலையில், தேர்தல் வாக்களிப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களின் 79 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 4.65 கோடி அளவிற்கு திடீரென உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவின் பல மாநில உயர்நீதிமன்றங்களில் தேர்தல் ஆணையத்தின் அலட்சிய நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை சுமார் 92 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
ரூ.5000 பஞ்சாமிர்தம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் வரவேற்பு!
-
மகளிர் உரிமைத் தொகை ரூ.2000 உயர்த்தி வழங்கப்படும் : முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கொடுக்கும் வாக்குறுதி!
-
“விஸ்வகுருவுக்கா இந்த நிலைமை? ; உலக நாடுகள் சிரித்திருக்க மாட்டார்களா?” : முரசொலி தலையங்கம்!
-
“1.31 கோடி பெண்களுக்கு ரூ.5,000 சிறப்பு மகளிர் உரிமை தொகை வழங்கப்படும்...” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
“கைகட்டி வேடிக்கை பார்ப்போம் என்று நினைத்தார்களா? தமிழ்நாடு தலைகுனியாது” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!