India
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் குளறுபடி : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 92 மனுக்கள் தாக்கல்!
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல், பல்வேறு சர்ச்சை நிகழ்வுகளுடன் நடந்து முடிந்தது.
பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பா.ஜ.க நிர்வாகிகளும், பா.ஜ.க.வினர் தொடர்புள்ளவர்கள் பலரும், தேர்தல் வாக்குச்சாவடிகளை விளையாட்டுக்களமாக கையாண்டதும், இணையத்தில் வெகுவாக பரவியது.
இது குறித்து, தேசிய அளவில் பல்வேறு விமர்சனங்கள் குவிந்தும், தேர்தல் ஆணையம் பல நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தது சர்ச்சையானது.
இந்நிலையில், தேர்தல் வாக்களிப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களின் 79 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 4.65 கோடி அளவிற்கு திடீரென உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவின் பல மாநில உயர்நீதிமன்றங்களில் தேர்தல் ஆணையத்தின் அலட்சிய நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை சுமார் 92 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
90% நிறைவடைந்த முதல்வர் விஜய் அறை மாற்ற வேலை : புதிய டெண்டர் விட்ட அரசு... சர்ச்சையில் பொதுப்பணித்துறை!
-
“திருவொற்றியூரில் மாணவர் கொலை.. கோமாளி சர்க்கார் மீது பயமில்லை” : உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
-
‘தவெக-வால் கட்டமைக்கப்பட்ட பொய்.. அமைச்சர் மரிய வில்சனால் அம்பலப்படும் விஜய்’ : முரசொலி விமர்சனம்!
-
தவெக அரசின் முதலீட்டாளர்கள் கூட்டம்.. திமுக முன்னாள் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜாவின் 5 கேள்விகள்!
-
‘தூய சக்தி ஆட்சியில் போதை சக்திகளின் நடமாட்டம்.. கொடூர ஆட்சிக்கு கோவையே சாட்சி’ : முரசொலி விமர்சனம்!