India
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் குளறுபடி : தேர்தல் ஆணையத்திற்கு எதிராக 92 மனுக்கள் தாக்கல்!
2024 நாடாளுமன்ற மக்களவை தேர்தல், பல்வேறு சர்ச்சை நிகழ்வுகளுடன் நடந்து முடிந்தது.
பா.ஜ.க ஆளும் உத்தரப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களின் பல பகுதிகளில் சிறுபான்மையினர், குறிப்பாக இஸ்லாமியர்கள் வலுக்கட்டாயமாக வாக்களிக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
பா.ஜ.க நிர்வாகிகளும், பா.ஜ.க.வினர் தொடர்புள்ளவர்கள் பலரும், தேர்தல் வாக்குச்சாவடிகளை விளையாட்டுக்களமாக கையாண்டதும், இணையத்தில் வெகுவாக பரவியது.
இது குறித்து, தேசிய அளவில் பல்வேறு விமர்சனங்கள் குவிந்தும், தேர்தல் ஆணையம் பல நிகழ்வுகளை வேடிக்கை பார்த்தது சர்ச்சையானது.
இந்நிலையில், தேர்தல் வாக்களிப்பு குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட ஏ.டி.ஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவின் 15 மாநிலங்களின் 79 மக்களவை தொகுதிகளில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை சுமார் 4.65 கோடி அளவிற்கு திடீரென உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், இந்தியாவின் பல மாநில உயர்நீதிமன்றங்களில் தேர்தல் ஆணையத்தின் அலட்சிய நடவடிக்கைகளுக்கு எதிராக இதுவரை சுமார் 92 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!