India
”எங்கள் குடும்பத்தில் ஒருவர் ராகுல் காந்தி” : பா.ஜ.கவினருக்கு கேரள இளைஞர் பதிலடி!
கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் வயநாடு பகுதியில் உள்ள சூரல் மலை, மேப்பாடி, முண்டகை ஆகிய பகுதிகளில் கடந்த 30-ம் தேதி அதிகாலை மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது.
இந்த நிலச்சரிவில் 344 பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்ட வீடுகள் நிலச்சரிவில் முற்றிலுமான இடிந்து தரைமட்டமானது. மேலும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து 5 நாட்களாக மீட்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு நாட்களாக எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்கள் சந்திபில், ”காங்கிரஸ் சார்பில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 100 வீடுகள் கட்டி கொடுக்கப்படும்” என உறுதியளித்தார்.
இந்த ஆய்வின் போது ராகுல் காந்தி சென்ற வாகனத்தை நிறுத்தி இளைஞர் ஒருவர், நிலச்சரிவின் பாதுப்புகள் குறித்து விளக்கினார். ஆனால் இதை பா.ஜ.கவினர் ராகுல் காந்தியை இளைஞர் ஒருவர் தடுத்து நிறுத்தியதாக போலியாக வீடியோக்களை இணையத்தில் வைரலாக்கினர்.
இதனைத் தொடர்ந்து அந்த இளைஞர் ரெஜினாஸ், என்ன நடந்தது என்பதை விளக்கி சமூகவலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், ”நான் ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தவில்லை. அவர் எங்கள் MP மட்டுமல்ல எங்கள் குடும்பத்தில் ஒருவர். நான் அவரிடம் நிலைமையை விளக்கினேன். இதை பா.ஜ.கவினர், நான் அவரை தடுத்து நிறுத்தியதாக பொய்யாக திரிகின்றனர்.” என கூறியுள்ளார்.
Also Read
-
“மின்வெட்டு.. ரீல்ஸ் போடாமல்.. போர்க்கால நடவடிக்கை எடுங்கள்” : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விளாசல்!
-
“தமிழ்நாட்டை உலுக்கிய சேலம் பாலியல் வன்கொடுமை சம்பவம்” - சிபிசிஐடி விசாரிக்க இடதுசாரிகள் வலியுறுத்தல்!
-
“கழகத் தலைவரின் அன்பில்.. தாயின் பரிவையும், தலைவனின் தன்னம்பிக்கையும் பார்க்கிறோம்” : தங்கம் தென்னரசு!
-
“அதிமுக. MLAக்களை ஷாப்பிங் செய்து கொண்டிருக்கும் விஜய்; பாஜகவின் ஜெராக்ஸ்” : தலைவர் மு.க.ஸ்டாலின் தாக்கு!
-
ஒன்றிய அரசுடன் விஜய் நெளிந்து குழைந்தது ஏன்? தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவா? : முரசொலி சரமாரி கேள்வி!