India
பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில், உள் இடஒதுக்கீடு செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு!
பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் தமிழ்நாடு, பஞ்சாப், அரியானா ஆகிய மாநிலங்கள் ஏற்கனெவே உள் ஒதுக்கீடு வழங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் 2009ஆம் ஆண்டு, அப்போதைய முதலமைச்சராக இருந்த கலைஞர், அருந்ததியினருக்கு மூன்று விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி உத்தரவிட்டிருந்தார்.
இம்மூன்று மாநிலங்களிலும் உத்தரவிட்டிருந்த உள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில், வெவ்வேறு காலத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்குகளுக்கு முறையே, 2004 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்கியது உச்சநீதிமன்றம்.
எனவே, அதற்கு சரியான தீர்வுக்காண, உச்சநீதிமன்றத்தில் 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று (1.8.24) புதிய தீர்ப்பு வழங்கியது.
அத்தீர்ப்பில், பட்டியல் மற்றும் பழங்குடியினர் இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு சட்டங்கள் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “பட்டியல், பழங்குடியினர் எதிர்கொள்ளும் பாகுபாடு காரணமாக அவர்களால் இலகுவாக முன்னிலைக்கு வர முடியவில்லை. அதனை சரி செய்யும் வகையில், அரசியல் சாசன பிரிவு 14 துணை வகைப்பாட்டை அனுமதிக்கிறது” என்றும், ”SC,ST பிரிவினருக்கு கிரீமி லேயரில் (Creamy layer ) இருந்து விலக்கு அளிக்க வேண்டும்” என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!