India
”காழ்ப்புணர்ச்சியுடன் செயல்படும் ஒன்றிய அரசு” : மக்களவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் குற்றச்சாட்டு!
2024- 25 ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை ஜூலை 23 ஆம் தேதி மக்களவையில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் தி.மு.க MP தமிழச்சி தங்கப்பாண்டியன் பேசுகையில், ”ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டுள்ளது. பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டது ஏன்? என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய தமிழச்சி தங்கப்பாண்டியன்,"சென்னை மெட்ரோ ரயில் 2 ஆம் கட்டத் திட்டத்திற்கு ரூ.63,000 கோடி ஒதுக்கப்படும் என்று அறிவித்த ஒன்றிய அரசு இதுவரை ஒரு பைசா கூட வழங்கவில்லை.
பீகார் உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கு பேரிடர் நிவாரண நிதி வழங்கப்படும் போது ஏன் தமிழ்நாட்டிற்கு மட்டும் பேரிடர் நிவாரண நிதி வழங்கவில்லை?. கூட்டணிக் கட்சிகளை திருப்திப்படுத்தவே ஒன்றிய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பா.ஜ.கவுக்கு தேர்தலில் தோல்வியை வழங்கியதால், தமிழ்நாட்டு மக்களை பழிவாங்குகிறதா ஒன்றிய அரசு?. இந்த பட்ஜெட் ALL India பட்ஜெட் அல்ல; Alliance பட்ஜெட். காழ்ப்புணர்ச்சி இல்லாமல் அனைத்து மாநிலங்களையும் சமமாக ஒன்றிய அரசு நடத்த வேண்டும்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருப்பரங்குன்றம் - அதிகாரக் குரலில் நீதிமன்றங்களுக்கு உத்தரவிடும் மோகன் பகவத் : மு.வீரபாண்டியன் கண்டனம்!
-
“2026 வெற்றிக்கு அடித்தளமாக ‘இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு’ அமையும்!” : துணை முதலமைச்சர் உதயநிதி அழைப்பு!
-
திராவிட மாடலில் ‘மிளிரும் மகளிர்!’ : மகளிருக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களின் பட்டியல் உள்ளே!
-
2-ம் கட்ட கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட விரிவாக்கம்.. விடுபட்ட மகளிர் வங்கிகளில் ரூ.1000 வரவு!
-
பத்துத் தோல்வி பழனிசாமியின் பழைய ஊழல்கள் – 1 : பட்டியலிட்டு அம்பலப்படுத்திய முரசொலி!