India
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : MPக்களுக்கு அனுப்பப்பட்ட தகவலால் பரபரப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
நாளை ஒன்றிய நிதிநிலைலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடரில் நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா, கொதிகலன்கள் மசோதா, உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த வி. சிவதாசன், ஏ.ஏ. ரஹீம் ஆகிய MPக்களுக்கு காலிஸ்தான் அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து குறுஞ்செய்தி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து எம்.பிக்கள் புகார் அளித்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கி தொடங்கியுள்ளனர்.
Also Read
-
“நானே ஜெயித்ததுபோல இருக்கு”: SBI வங்கி தேர்வில் வெற்றி பெற்ற கமலிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
-
இவ்வளவு கொடூரமான ஒரு மனிதனுக்கு எப்படி ஜாமீன் கிடைக்கும்? : சுப்ரியா சுலே MP கேள்வி!
-
“எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகள்..”: கிறிஸ்தவர்களை தாக்கும் இந்துத்வ கும்பல் - முதலமைச்சர் கண்டனம்!
-
கிறிஸ்தவர்களைக் குறிவைத்து தாக்கும் இந்துத்துவ கும்பல் : அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம்!
-
கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை: 2 மாவட்டங்களில் முதல்வர் கள ஆய்வு.. திறந்து வைக்கப்படும் திட்டங்கள்? விவரம்