India
நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் : MPக்களுக்கு அனுப்பப்பட்ட தகவலால் பரபரப்பு!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இன்று பொருளாதார ஆய்வறிக்கையை நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
நாளை ஒன்றிய நிதிநிலைலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் இந்த கூட்டத் தொடரில் நிதி மசோதா, பேரிடர் மேலாண்மை மசோதா, கொதிகலன்கள் மசோதா, உள்ளிட்ட 6 மசோதாக்களை தாக்கல் செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் நாடாளுமன்றத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவை சேர்ந்த வி. சிவதாசன், ஏ.ஏ. ரஹீம் ஆகிய MPக்களுக்கு காலிஸ்தான் அமைப்பின் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் குறித்து குறுஞ்செய்தி தகவல் அனுப்பப்பட்டுள்ளது.
பின்னர் இது குறித்து எம்.பிக்கள் புகார் அளித்துள்ளது. இதையடுத்து டெல்லி முழுவதும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.மேலும் இது குறித்து டெல்லி போலீசார் விசாரணையை தொடங்கி தொடங்கியுள்ளனர்.
Also Read
- 
	    
	      
கோவை பாலியல் வன்கொடுமை : “பெண்களின் முன்னேற்றமே இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும்..” - முதலமைச்சர்!
 - 
	    
	      
கோவை இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமை : பதுங்கியிருந்த 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்!
 - 
	    
	      
சாலை விபத்தில் உயிரிழந்த திமுக உறுப்பினர்.. குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கினார் முதலமைச்சர்!
 - 
	    
	      
10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு.. தேர்வு தேதி என்ன? - முழு விவரம்!
 - 
	    
	      
ஒன்றிய அரசின் வழக்கை நான் விசாரிக்க கூடாது என அரசு நினைக்கிறது- தலைமை நீதிபதி கவாய் பகிரங்க குற்றச்சாட்டு