India
மணிப்பூரில் மீண்டும் வன்முறை : CRPF வீரர் சுட்டுக்கொலை - வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு!
மணிப்பூரில் குக்கி இனத்தவருக்கும், மெய்தி இனத்தவருக்கும் இடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மோங்புங் என்னும் கிராமத்தில் சி.ஆர்.பி.ஆர். பாதுகாப்புப்படையினர் மீது, ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியது.
இதில், பீகாரைச் சேர்ந்த அஜய்குமார் என்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அங்கு மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
மணிப்பூரில் ஒருவருடத்திற்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசு இந்த வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப்பார்த்து வருகிறது என்பதுதான் வேதனையாக உள்ளது.
Also Read
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!
-
“பாஜகவை வீழ்த்துவதுதான் முதல் குறிக்கோள்!” : திமுக - CPI இடையே முடிந்த தொகுதி உடன்பாடு - விவரம் உள்ளே!