India
மணிப்பூரில் மீண்டும் வன்முறை : CRPF வீரர் சுட்டுக்கொலை - வேடிக்கை பார்க்கும் ஒன்றிய அரசு!
மணிப்பூரில் குக்கி இனத்தவருக்கும், மெய்தி இனத்தவருக்கும் இடையே, கடந்த ஓராண்டுக்கும் மேலாக மோதல் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கும் இடையே அமைதியை ஏற்படுத்த மாநில, ஒன்றிய பாஜக அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இந்நிலையில், மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவம் அரங்கேறியுள்ளது. மணிப்பூரின் ஜிரிபாம் மாவட்டத்தில் மோங்புங் என்னும் கிராமத்தில் சி.ஆர்.பி.ஆர். பாதுகாப்புப்படையினர் மீது, ஆயுதம் ஏந்திய தீவிரவாத குழு ஒன்று தாக்குதல் நடத்தியது.
இதில், பீகாரைச் சேர்ந்த அஜய்குமார் என்ற ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்தார். இதனால், அங்கு மீண்டும் பதற்றம் நிலவி வருகிறது.
மணிப்பூரில் ஒருவருடத்திற்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. ஒன்றிய பா.ஜ.க அரசு இந்த வன்முறையை கட்டுப்படுத்தாமல் வேடிக்கைப்பார்த்து வருகிறது என்பதுதான் வேதனையாக உள்ளது.
Also Read
-
“SIR-க்கு பிறகு தமிழ்நாட்டில் 97,37,832 வாக்காளர்கள் நீக்கம்!” : தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் தகவல்!
-
வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இடம்பெறவில்லையா? : சென்னை மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
-
சென்னையில் 14.25 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்! : மாவட்ட தேர்தல் ஆணையர் சொல்வது என்ன?
-
சென்னையில் மின்சாரப் பேருந்து பணிமனை: துணை முதலமைச்சர் தொடங்கி வைத்த மின்சார பேருந்துகளின் சிறப்புகள்!
-
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்க்க தடை விதித்த சென்னை மாநகராட்சி : காரணம் என்ன?