India
பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடி கடன் : விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் !
இந்தியாவின் பிரபல தொழிலதிபரான விஜய் மல்லையா இந்திய பொதுத்துறை வங்கிகளில் 9,000 கோடிக்கும் மேல் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அதனை திரும்ப கட்டாததால் அவர் மீது வங்கிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இது குறித்து வழக்கு பதிவ செய்யப்பட்டது.
இதன் காரணமாக கடந்த 2016ம் ஆண்டு வெளிநாட்டிற்கு தப்பிசென்ற அவர் தற்போது வரை இந்தியா திரும்பாமல் இங்கிலாந்தின் லண்டன் நகரிலேயே வசித்து வருகிறார். எனினும் அவர் மீதான வழக்கு தற்போதுவரை சிபிஐ சிறப்பு நீதிமன்ற நடைபெற்று வருகிறது.
சமீபத்தில் அவர் மீது நீதிமன்றத்தில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதனைத் தொடர்ந்து லண்டனில் வசித்து வரும் விஜய் மல்லையாவை நாடு கடத்தி இந்தியாவுக்கு அழைத்து வர அரசு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் அதற்கு ஏராளமான சட்டசிக்கல்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றம் விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. ஆனால், இதனை நடைமுறைப்படுத்தமுடியுமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
ஏனெனில் இதற்கு முன்னரும் பலமுறை விஜய் மல்லையாவிற்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு அவரை இந்தியாவுக்கு அழைத்து வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. எனினும் அந்த முயற்சி தற்போது வரை கைகூடவில்லை என்பதும், இது வெளியுறவுத்துறையின் மோசமான தோல்வி என்றும் விமர்சிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“எத்தனை விருது கிடைத்தாலும், தமிழக அரசின் விருதுகளான ‘தாயின் முத்தத்திற்கு’ ஈடாகாது!” : உதயநிதி பேச்சு!
-
தமிழ்நாடு அரசின் 7 ஆண்டுகளுக்கான திரைப்பட விருதுகள் மற்றும் சின்னத்திரை விருதுகள்! : முழு விவரம் உள்ளே!
-
“எடப்பாடி பழனிசாமியின் வாயை, நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்துவிட்டார்!” : அமைச்சர் ரகுபதி!
-
தமிழ்நாடு காவல்துறைக்கு ரூ.122.19 கோடியில் புதிய கட்டடங்கள்.. 360 புதிய வாகனங்கள்! : முழு விவரம் உள்ளே!
-
சென்னையில் ரூ.3,510 கோடி முதலீட்டில் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க மையம்! : MoU கையெழுத்தானது!