India
அமித் மாளவியா மீது பாலியல் புகார் : ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி பரபரப்பு குற்றச்சாட்டு!
பா.ஜ.க கட்சியின் IT பிரிவு தலைவராக இருப்பவர் அமித் மாளவியா. இவர் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் மேற்குவங்க மாநிலத்தில் தேர்தல் பணி மேற்பார்வையாளராக இருந்துள்ளார்.
அப்போது பல பெண்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தாக புகார் எழுந்துள்ளது. இது குறித்து ஆர்.எஸ். எஸ் நிர்வாகி ஒருவர் பா.ஜ.கவின் மேலிடத்திற்கு புகார் எழுப்பியுள்ளார்.
மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்று 24 மணி நேரத்திற்குள் பா.ஜ.க நிர்வாகி மீது பாலியல் புகார் எழுந்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.இந்நிலையில், அமித் மாளவியாவை பா.ஜ.கவில் இருந்து உடனே நீக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்து இருக்கும் காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஸ்ரீனேட், ” பல பெண்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய பா.ஜ.க ஐ.டி பிரிவு தலைவரான அமித் மாளவியா மீது பா.ஜ.க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். பா.ஜ.கவின் அனைத்து பதவிகளில இருந்தும் அவரை நீக்க வேண்டும்.
இந்த விவகாரத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் எடுக்கும் நடவடிக்கைகளை அறிய விரும்புகிறோம்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!