India
"மோடியை விஷ்ணுவின் 11வது அவதாரமாக காட்ட பாஜக முயற்சி" : மல்லிகார்ஜூன கார்கே குற்றச்சாட்டு!
ஒடிசா மாநிலம் பாலசூரில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஸ்ரீகாந்த் கே ஜெனாவை ஆதரித்து நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
அப்போது பேசிய மல்லிகார்ஜூன கார்கே,"இந்த தேர்தல் வருங்கால சந்ததியினருக்கானது. மக்கள் கவனமாக வாக்களிக்க வேண்டும். அரசியலமைப்பும், ஜனநாயகமும் ஆபத்தில் உள்ளது. அரசியலமைப்பை பாதுகாக்க தவறினால் எதிர்காலம் ஆபத்தில் சிக்கி விடும்.
பிரதமர் மோடியை விஷ்ணுவின் 11 ஆவது அவதாரமாக மாற்ற பா.ஜ.க தலைவர்கள் முயற்சிக்கிறார்கள். இதை இந்திய மக்கள் ஏற்க மாட்டார்கள். ஜூன் 4 ஆம் தேதி இந்தியா கூட்டணி ஆட்சி அமைப்பது உறுதி.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்த உடன் ஒவ்வொரு ஏழை குடும்பத்திற்கும் மாதம் ரூ.8,500 வழங்கப்படும். மேலும், குறைந்தபட்ச தினசரி ஊதியம் ரூ.250ல் இருந்து ரூ.400 ஆக உயர்த்தப்படும். ஒன்றிய அரசு துறைகளில் காலியாக உள்ள 30 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும். விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.
Also Read
-
தி.மு.கழக மகளிர் அணியின் ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ மாநாடு! : எங்கு? எப்போது?
-
தேசத்தின் ஒருமைப்பாட்டுக்கு எதிரான மசோதா : காப்பீட்டு திருத்த மசோதாவுக்கு தி.மு.க MP எதிர்ப்பு!
-
தேசத்தையே இழிவுபடுத்திய மோடி அரசு : மகாத்மா காந்தி பெயர் நீக்கம் - இந்தியா கூட்டணி MP-க்கள் எதிர்ப்பு!
-
ரூ.39.20 கோடியில் தமிழ்நாடு ஹஜ் இல்லம்... அறிவித்த ஒன்பதே மாதத்தில் அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்!
-
100 நாள் வேலை திட்டத்தை குழிதோண்டி புதைக்கும் பா.ஜ.க அரசு : அமைச்சர் ஐ.பெரியசாமி கண்டனம்!