India
இந்தியா வந்ததும் கைது செய்யப்படுவாரா பிரஜ்வல் ரேவண்ணா ? - கர்நாடக அமைச்சரின் பதில் என்ன ?
கர்நாடகா மாநிலம் ஹாசன் தொகுதி வேட்பாளரும், பாஜகவின் கூட்டணி கட்சியான மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் (JDS) எம்.பியுமாக இருப்பவர் பிரஜ்வல் ரேவண்ணா. கடந்த மாதம் இவர் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்ற பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்க சிறப்புப் புலனாய்வுக் குழு தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா இந்தியா வந்தவுடன் விமான நிலையத்தில் கைது செய்ய முடிவு எடுக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் டாக்டர் ஜி பரமேஸ்வர் கூறியுள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், "பிரஜ்வல் ரேவண்ணா இந்திய விமான நிலையத்தில் தரையிறங்கியவுடன் அவரை கைது செய்யலாமா என்பதை எஸ்ஐடி முடிவு செய்யும். பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்வதில் தாமதம் ஏதும் இல்லை.
அந்த வீடியோவை வெளியிட அவரை தூண்டியது எது என்று தெரியவில்லை. மே 31ம் தேதி என்ன நடக்கிறது என்று பார்ப்போம். அவர் வரவில்லை என்றால் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.
ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளோம், வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு, வெளியுறவு அமைச்சகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. ப்ளூ கார்னர் நோட்டீசும் வெளியிடப்பட்டுள்ளது. அவர் வரவில்லை என்றால், அவரது இருப்பிடம் கண்டறியப்பட்டு, இன்டர்போல் நடவடிக்கை எடுக்கும்"என்று கூறினார்.
Also Read
-
“IND vs AFG Tour.. டெஸ்ட், ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.. புது வீரர்களுடன் அசத்தல் Squad”
-
பொய்யை மட்டுமே பரப்பும் த.வெ.க! : ஆதாரங்களோடு அம்பலப்படுத்திய The Hindu ஊடகம்!
-
“பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் - இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்” : தி.மு.க வலியுறுத்தல்!
-
வீடு புகுந்து செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கஞ்சா கும்பல் : திருவாரூரில் அதிர்ச்சி சம்பவம்!
-
கானா பாடகர் வெட்டி கொலை : 7 பேர் கைது - தமிழ்நாட்டில் அதிகரிக்கும் குற்றச்சம்பவங்கள்!