India
செயலி மூலம் பெண் ஆசிரியர் போல குரலை மாற்றி பேசி மோசடி : வன்கொடுமை செய்யப்பட்ட மாணவிகள் !
மத்திய பிரதேசத்தை சேர்ந்தவர் பிரஜேஷ் குஷ்வாஹா. பெரிய அளவில் படிக்காத இவர் மொபைல்போனை பயன்படுத்துவதில் கைதேர்ந்தவராக இருந்துள்ளார். அதில் உள்ள மொபைல் செயலியைப் பயன்படுத்தி பெண் ஆசிரியர் போல மாணவிகளிடம் பேசியுள்ளார்.
பெண் பெயரில் தன்னை கல்லூரி ஆசிரியர் என அறிமுகப்படுத்திக்கொண்டு பழங்குடி சமூகத்தை சேர்ந்த மாணவிகளிடம் பேசிவந்துள்ளார். அவர்களிடம் கல்லூரி உதவித்தொகை பெற்றுத்தருவதாக கூறி, தான் அழைக்கும் இடத்துக்கு மாணவிகளை வரவழைத்துள்ளார்.
பின்னர் அங்கிருந்து அவர்களை இரு சக்கர வாகனத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துக்கு அழைத்துச்சென்று அவர்களை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்து அவர்களின் மொபைல்போனை புடுங்கிக்கொண்டு அனுப்புவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இதுவரை 7 மாணவிகளை இவர் வன்கொடுமை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அழைக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவிகள் அளித்த தகவலின் அடிப்படையில் பிரஜேஷ் குஷ்வாஹாவை போலிஸார் கைது செய்தனர்.
மேலும்,அவரின் கூட்டாளிகள் 3 பெரும் கைது செய்யப்பட்டனர். அவரிடமிருந்து 15 மொபைல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்த 9 பேர் கொண்ட கமிட்டி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.
Also Read
-
“பெயரை மாற்றலாம்; வரலாற்றை மாற்ற முடியாது!” : தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!
-
பயிர்க்கடன் தள்ளுபடி ஏமாற்றத்தையடுத்து, காவிரி நீர் வரத்திலும் ஏமாற்றம்? : உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
-
உயர்கல்வியின் எதிர்காலம் அரசியல் அதிகாரப் போட்டியில் அல்ல : த.வெ.க அரசுக்கு ஜவாஹிருல்லா கண்டனம்!
-
பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர் நியமனக் குழு : த.வெ.க அரசின் முடிவுக்கு தமிழச்சி தங்கபாண்டியன் எதிர்ப்பு!
-
கரூர் என்றால் யாருக்கு பயம்? - 1 : தலைமறைவாக இருந்த நிர்மல் குமாருக்கு முரசொலி தலையங்கம் கேள்வி!