India
அப்பட்டமாக நடைபெறும் முறைகேடு : வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜ.க குறியீடு!
18 ஆவது மக்களவை தேர்தல் 7 கட்டமாக நடைபெறும் நிலையில் முதல் 5 கட்ட தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இன்று 6 ஆம் கட்ட மக்களவை தேர்தல் 58 தொகுதிகளில் விறுவிறுப்பாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
பீகாரில் - 8, அரியானாவில் - 10, ஜம்மு -காஷ்மீரில் -1, ஜார்கண்டில் - 4 , டெல்லியில் - 7, ஒடிசாவில் - 6 , உத்தரபிரதேசத்தில் - 14 மேற்குவங்கத்தில் - 8 என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டமன்றத்துக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு காலையில் தொடங்கியது.
இந்நிலையில், மேற்குவங்க மாநிலம், ரகுநாத்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் 5 வாக்குப்பதிவு ஏந்திரங்களில் பா.ஜ.க என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாகவே பா.ஜ.கவுக்கு ஆதரவாகவே தேர்தல் ஆணையம் செயல்பட்டு வருவதாக இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். மேலும் வாக்குப்பதிவு முடிந்து மூன்று நாட்கள் கழித்துதான் வாக்கு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டு வருகிறது.
இதுபலத்த சந்தேகத்தை எழுப்புவதாக எதிர்க்கட்சிகள் குறிவருகின்றனர். இந்நிலையில் வாக்குப்பதிவு ஏந்திரங்களில் பா.ஜ.க என்று எழுதப்பட்ட அடையாள அட்டை இருப்பது எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டை மெய்பிக்கும் விதமாக உள்ளது.
Also Read
-
“தமிழ்நாட்டின் நிதிப் பொறுப்பும் பட்ஜெட் மேலாண்மையும் கட்டமைப்பிற்குள் உள்ளது” : இந்து நாளேடு பாராட்டு!
-
தஞ்சையில் அடுத்த மகளிர் அணி மாநாடு! - தயாராகும் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” : முழு விவரம் உள்ளே!
-
“மதவாத அரசியல் போதையை தடுத்திட நாமெல்லாம் ஒன்று சேர வேண்டும்!” : திருச்சியில் முதலமைச்சர் பேச்சு!
-
தமிழ்நாட்டில் 2025 ஆம் ஆண்டு 21 லட்சம் வாகனங்கள் பதிவு : கடந்த ஆண்டை விட 8.4% வாகனங்கள் விற்பனை!
-
2025 ஆம் ஆண்டில் 2.07 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்ப்பு : அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்!