India
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
மேற்குவங்கத்தில் ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியருக்கு ஆளுநர் ஆனந்த போஸ் பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், புர்பா பர்தமான் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, ஆளுநர் மாளிகையில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான பெண்ணுக்காக தன்னுடைய இதயம் கண்ணீர் சிந்துவதாக தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வீடியோ சாட்சியைப் பார்த்தபோது அப்பெண்ணின் கண்ணீர் தன்னுடைய இதயத்தை உடைத்தது என்றும் அவர் கூறினார்.
ஆளுநர் மாளிகையில் பணிபுரியும் பெண் ஊழியருக்கு, ஆளுநர் பாலியல் தொல்லை அளித்தது குறித்து பாஜகவினர் பதிலளிக்க வேண்டும் என கூறிய மம்தா பானர்ஜி, ராஜ்பவனுக்குச் சென்ற பிரதமர் மோடி இந்த விவகாரம் குறித்து ஏன் ஒருவார்த்தைக் கூட பேசவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Also Read
-
“அதிமுகவை அழிக்க வேறு யாரும் தேவையில்லை.. இவரே போதும்..” எடப்பாடி பழனிசாமியை விமர்சித்த கருணாஸ்!
-
Fact Check : வள்ளுவருக்கு விபூதி... மீண்டும் மீண்டும்.. பொய் பரப்புவதில் பாஜகவுடன் போட்டிபோடும் அதிமுக!
-
"அரசியல் சண்டைகளுக்கு நீதிமன்றத்தை பயன்படுத்த வேண்டாம்" - பாஜகவுக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
-
ஆதாரை வாக்காளர் பட்டியலுக்கான ஆவணமாக ஏற்கவேண்டும் - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !
-
”அ.தி.மு.க-விற்கு விரைவில் ICUதான்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!