India
”மதத்தை வைத்து மக்களை திசை திருப்பப் பார்க்கும் மோடி” : பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!
வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்ற உண்மையான பிரச்சனைகளை புறக்கணித்துவிட்டு மதப் பிரச்சனைகளை கையில் எடுத்து மக்களை பா.ஜ.க திசை திருப்பப் பார்க்கிறது என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார்.
சத்தீஸ்கர் மாநிலம் கரோபாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரியங்கா காந்தி, " அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற நினைக்கும் பா.ஜ.கவின் நோக்கம் மிகவும் ஆபத்தானது. அரசியலமைப்பு சட்டத்தை மாற்றுவதைப் பிரதமர் மறுத்தாலும் பா.ஜ.க தலைவர்களின் பேச்சுகள் உண்மையை வெளிப்படுத்தி விடுகிறது.
மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்தால் தங்களது திட்டங்களைச் செயல்படுத்த ஆரம்பித்து விடுவார்கள். சாமானிய மக்கள் பற்றி அவர்களுக்குக் கொஞ்சம் கூட கவலை இல்லை. ஆனால் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்கி தனது நண்பர்களுக்கு ஒப்படைத்து வருகிறார் மோடி.
எத்தனை பேருக்கு வேலை கொடுத்தீர்கள் என்று மோடியிடம் கேட்டால் அவரிடம் பதில் இல்லை. 45 வருடங்கள் இல்லாத அளவுக்கு வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. அரசுத்துறைகளில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளது. இதை பிரதமர் மோடி நிரப்பவில்லை.
தேர்தல் பத்திர திட்டத்தின் மூலம் பா.ஜ.க மிகப் பெரிய ஊழல் செய்துள்ளது. நிறுவனங்கள் பா.ஜ.கவுக்கு நன்கொடை அளிப்பதற்காக விசாரணை அமைப்புகள் பயன்படுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“முதல்வருக்கு நாக்கில் நிதானம் வேண்டும்.. சட்டமன்றத்தில் கண்ணியம் இல்லை”: திருச்சி சிவா எம்.பி கண்டன உரை!
-
முதலமைச்சர் விஜய் தொகுதியின் அவலம்.. 6 நாட்களாக தண்ணீர் இல்லை.. கோபத்துடன் வீதியில் இறங்கிய மக்கள்!
-
“MISA தியாகத்தைக் கொச்சைப்படுத்துவதா?” - விஜய்யைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் வெகுண்டெழுந்த தி.மு.க!
-
ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணன் மீது நடவடிக்கை எடுக்க முதலமைச்சர் விஜய்க்கு பயம் : காரணத்தை சொன்ன முரசொலி!
-
“தமிழர்களின் அன்றாட வாழ்க்கையோடு இரண்டற இயைந்தவர் சாலமன் பாப்பையா” : மு.க.ஸ்டாலின் இரங்கல்!