India
பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு செக் : இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு!
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இந்தியா கூட்டணி VS தேசிய ஜனநாயகக் கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்தில் வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து இழுபறியிலிருந்து வந்த பீகார் மாநிலத்திலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் 26 தொகுதியில் போட்டியிடுகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சி.பி.ஐ எம்.எல் 3 தொகுதியிலும், சி.பி.ஐ மற்றும் சி.பி.எ.ம் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தற்போது பீகாரிலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது பா.ஜ.க கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
Also Read
-
காலை உணவுத் திட்டம் : “குழந்தைகளின் வயிறும் நிறைகிறது, அறிவும் வளர்கிறது!” - முதலமைச்சர் நெகிழ்ச்சி!
-
ஆக.26-ல் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் : சிறப்பு விருந்தினாராக கலந்துகொள்ளும் பஞ்சாப் முதல்வர்!
-
கேழ்வரகு உற்பத்தித் திறனில் இந்தியாவிலேயே முதலிடம்.. விவசாயிகள் போராட வேண்டிய நிலை இல்லாத தமிழ்நாடு!
-
நவம்பரில் கேரளா வரும் மெஸ்ஸியின் அர்ஜென்டினா கால்பந்து அணி : உறுதி செய்த கால்பந்து வாரியம் !
-
”மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி - ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்தும்” : முதலமைச்சர் பேச்சு!