India
பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு செக் : இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு!
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இந்தியா கூட்டணி VS தேசிய ஜனநாயகக் கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்தில் வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து இழுபறியிலிருந்து வந்த பீகார் மாநிலத்திலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் 26 தொகுதியில் போட்டியிடுகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சி.பி.ஐ எம்.எல் 3 தொகுதியிலும், சி.பி.ஐ மற்றும் சி.பி.எ.ம் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தற்போது பீகாரிலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது பா.ஜ.க கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!