India
பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு செக் : இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு!
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இந்தியா கூட்டணி VS தேசிய ஜனநாயகக் கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்தில் வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து இழுபறியிலிருந்து வந்த பீகார் மாநிலத்திலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் 26 தொகுதியில் போட்டியிடுகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சி.பி.ஐ எம்.எல் 3 தொகுதியிலும், சி.பி.ஐ மற்றும் சி.பி.எ.ம் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தற்போது பீகாரிலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது பா.ஜ.க கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
Also Read
-
சிலிண்டர்களை பதுக்கினால் சிறை… எஸ்மா (ESMA) சட்டம் சொல்வது என்ன? - முழு தகவல் உள்ளே!
-
கச்சா எண்ணெய் விவகாரம் : “டெல்லிக்கு தலைநகர் அமெரிக்காவா?” - முரசொலி தலையங்கம் ஆதங்கம்!
-
தமிழ்நாட்டில் நாங்கள்தான் ஜெயிப்போம்! நாங்கள் மட்டும்தான் ஜெயிப்போம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
'ஸ்டாலின் தொடரட்டும் ; தமிழ்நாடு வெல்லட்டும்' - திருச்சியில் தொடங்கியது தி.மு.க-வின் 12-வது மாநில மாநாடு!
-
ரூ.21.72 கோடியில் முதல்வர் படைப்பகங்கள், பள்ளிக் கட்டடங்கள் திறப்பு! : முழு விவரம் உள்ளே!