India
பீகாரில் பா.ஜ.க கூட்டணிக்கு செக் : இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு!
இந்தியாவில் மக்களவை தேர்தல் ஏப்.19 ஆம் தேதி முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தல் இந்தியா கூட்டணி VS தேசிய ஜனநாயகக் கூட்டணி என இருமுனை போட்டி ஏற்பட்டுள்ளது.
கடந்த 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்த எதிர்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய இந்தியா கூட்டணி ஒவ்வொரு நாளும் தேர்தல் களத்தில் வலுவடைந்து வருகிறது.
இந்நிலையில் தொடர்ந்து இழுபறியிலிருந்து வந்த பீகார் மாநிலத்திலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு எட்டியுள்ளது. மொத்தம் உள்ள 40 தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் 26 தொகுதியில் போட்டியிடுகிறது.
அதேபோல் காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சி.பி.ஐ எம்.எல் 3 தொகுதியிலும், சி.பி.ஐ மற்றும் சி.பி.எ.ம் கட்சிகள் தலா ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறது. தற்போது பீகாரிலும் இந்தியா கூட்டணியில் தொகுதி உடன்பாடு நிறைவு பெற்றுள்ளது பா.ஜ.க கூட்டணிக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்.
Also Read
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!