India
”வேலையின்மை பிரச்சனையை பா.ஜ.க அரசால் தீர்க்க முடியாது” : ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகர் பேச்சு!
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என கூறி ஒன்றியத்தில் ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ஆனால் 10 ஆண்டுகால ஆட்சியில் அவர்கள் இளைஞர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதியில் 10%ம் கூட நிறைவேற்றவில்லை.
வீதிக்கு வீதி வேலை இல்லாமல் இளைஞர்கள் இருக்கிறார்கள். இந்தியாவின் எதிர்காலமாக இருக்கும் இளைஞர்களைப் பற்றி ஒன்றிய பா.ஜ.க அரசுக்குக் கொஞ்சம் கூட அக்கறை இல்லை என எதிர்க்கட்சி தலைவர்கள் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில், வேலையின்மை பிரச்சனையை அரசால் தீர்க்க முடியாது என ஒன்றிய அரசின் பொருளாதார ஆலோசகர் ஆனந்த் நாகேஸ்வரன் கூறியுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியின் வேலை வாய்ப்பு குறித்த பொய் பேச்சுகள் அம்பலமாகியுள்ளது.
டெல்லியில் மனிதவள மேம்பாட்டு நிறுவனம் நடத்திய இந்தியா வேலைவாய்ப்பு 2024 ஆய்வு அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ஆனந்த் நாகேஸ்வரன், "வேலைவாய்ப்பு பிரச்சனையில் ஒன்றிய அரசால் மட்டுமே முழுமையாகச் சரி செய்ய முடியாது. கார்ப்ரேட் நிறுவனங்கள் அதிகமான வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.தொழிலாளர்களுக்கு இடையே ஏற்றத்தாழ்வுகள் உள்ளது. மேலும் பெண் தொழிலாளர்கள் மீதான பாரபட்சம் தொடர்ந்து வருகிறது" என பேசியுள்ளார்.
Also Read
-
திரும்பத் திரும்ப... "வயிற்றெரிச்சலால் அறிக்கை விட்டிருக்கிறார் பழனிசாமி" - அமைச்சர் TRB ராஜா விமர்சனம் !
-
பப்ஜி முதல் பாரம்பரிய விளையாட்டுகள் வரை.. சென்னையில் கேமிங் திருவிழா... குவிந்த இளைஞர்கள் !
-
வடகிழக்குப் பருவமழை - மக்களுக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது : அதிகாரிகளுக்கு துணை முதலமைச்சர் அறிவுறுத்தல்!
-
”இந்தியாவின் ஏற்றுமதி துறைகளைப் பாதுகாக்க புதிய கொள்கையை வடிவமைக்க வேண்டும்” : TN CM Stalin வலியுறுத்தல்!
-
ஆன்லைன் பண மோசடி : பொதுமக்களுக்கு காவல்துறையின் எச்சரிக்கை என்ன?