India
”பிரிப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் - இளைஞர் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” : ராகுல் காந்தி MP!
உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்.17,18 ஆம் தேதிகளில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் இந்த தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது. இதையடுத்து தேர்வு எழுதிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் வேறுவழி இன்றி தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர் சக்திக்கும் இளைஞர் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி MP சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில், "உண்மையை அரசாங்கம் எவ்வளவுதான் நசுக்க முயற்சித்தாலும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஒன்றுபடுபவர்கள் வெற்றி பெறுவார்கள், பிரிப்பவர்கள் நசுக்கப்படுவார்கள்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
அமைச்சர் சரத்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும் : தி.மு.க. மாணவரணி திட்டவட்டம்!
-
மீண்டும் மதமாற்ற தடைசட்டமா?; பா.ஜ.க அஜெண்டாவுக்கு வேலை பார்க்கும் த.வெ.க : தி.மு.க கண்டனம்!
-
‘பொறுப்பேற்று’ செயல்பட த.வெ.க அரசு மறுப்பதே, பிரச்சனைகள் அதிகரிக்கக் காரணம்! : கனிமொழி கண்டனம்!
-
“SofaModel அரசால் திணிக்கப்படும் இடைத்தேர்தல்.. மக்கள் பாடம் புகட்டுவார்கள்” - உதயநிதி ஸ்டாலின்!
-
டேக் டைவர்ஷன் என ஓடும் ரீல்ஸ் ஆட்சிக்கு.. மக்களே முற்றுப்புள்ளி வைப்பார்கள் - கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!