India
”பிரிப்பவர்கள் நசுக்கப்படுவார்கள் - இளைஞர் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி” : ராகுல் காந்தி MP!
உத்தர பிரதேச மாநிலத்தில் பிப்.17,18 ஆம் தேதிகளில் காவல்துறையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. 60 ஆயிரம் காலிப் பணியிடங்களுக்கு சுமார் 50 லட்சம் பேர் தேர்வு எழுதினர்.
இந்நிலையில் இந்த தேர்வுக்கான வினாத்தாள் தேர்வுக்கு முன்னதாகவே கசிந்ததாக சமூகவலைதளங்களில் வீடியோ பரவியது. இதையடுத்து தேர்வு எழுதிய இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் காவல்துறை தேர்வை ரத்து செய்து மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் வேறுவழி இன்றி தேர்வை ரத்து செய்வதாக அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். மேலும் 6 மாதங்களுக்குள் மறுதேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மாணவர் சக்திக்கும் இளைஞர் ஒற்றுமைக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி MP சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அவரது பதிவில், "உண்மையை அரசாங்கம் எவ்வளவுதான் நசுக்க முயற்சித்தாலும் ஒன்றுபட்டுப் போராடுவதன் மூலமே நமது உரிமைகளை வென்றெடுக்க முடியும். ஒன்றுபடுபவர்கள் வெற்றி பெறுவார்கள், பிரிப்பவர்கள் நசுக்கப்படுவார்கள்." என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!