India
தடுப்புச் சுவர் மீது மோதி நொறுங்கிய கார் : உயிரிழந்த MLA - தெலங்கானாவில் அதிர்ச்சி சம்பவம்!
தெலங்கானா மாநிலம் கண்டோன்மென்ட் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் லாஸ்யா நந்திதா. பாரத ராஷ்டிர சமிதி (BRS) கட்சியைச் சேர்ந்த இவர் பாசராவிலிருந்து ஹைதராபாத்துக்கு தனது காரில் திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது படன்சேரு அருகே சென்றபோது சாலையிலிருந்த தடுப்பு சுவர் மீது கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே லாஸ்யா நந்திதா MLA உயிரிழந்தார். மேலும் கார் ஓட்டுநர் மற்றும் பாதுகாப்பு அதிகாரி ஆகிய இருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.
இந்த விபத்து குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் BRS தலைவர் கே. சந்திரசேகர் ராவ், மூத்த தலைவர் கே.டி.ராமராவ் உள்ளிட்ட பலர் மறைந்த லாஸ்யா நந்திதாவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.
மறைந்த BRS கட்சி தலைவர் ஜி. சயன்னாவின் மகள்தான் லாஸ்யா நந்திதா ஆவார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த சட்டமன்றத் தேர்தலில் செகந்திராபாத் கண்டோன்மென்ட் சட்டமன்றத் தொகுதியிலிருந்து முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தந்தை இதே தொகுதியில் 5 முறை வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“LPG விலையை ஏற்றுவது சரியல்ல” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
”MI-யுடன் CSK தோற்றால் பிளே ஆப் வாய்ப்பு என்னாகும்? காத்திருக்கும் CSK ரசிகர்கள்” : முழு விவரம்!
-
மோடி அரசின் தேர்தலுக்கான பரிசு இது : எரிவாயு சிலிண்டர் விலை உயர்வுக்கு ராகுல் காந்தி எம்.பி கண்டனம்!
-
”கிடு கிடு விலை உயர்வில் சிலிண்டர்கள்.. 5 மாநில தேர்தல் முடிந்ததும் ஆட்டம் தொடக்கம்” : முழு விவரம் அறிக!
-
”சூடான வெப்பத்திற்கு இடையே வந்த மழை அறிவிப்பு.. எப்போது தொடங்கும் தென்மேற்கு பருவமழை” : முழு விவரம்!