India
கத்தி முனையில் வங்கியில் ரூ.8.54 லட்சம் கொள்ளை : பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் கிராம வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், தலையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த அதிகாரியிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
பின்னர் வங்கியிலிருந்து ரூ.8.54 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டனர்.
இதையடுத்து சோதனை சாவடி ஒன்றில் போலிஸார் கொள்ளையனை சுட்டு பிடித்துள்ளனர். மேலும் கொள்ளையனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பதும் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வங்கியில் புகுந்து மர்ம நபர் கத்தியை காட்டி கொள்ளையடிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ஐரோப்பிய பயணத்தின் இரண்டாம் கட்டம் - முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்! : விவரம் உள்ளே!
-
கிளாம்பாக்கம் வரை நீட்டிக்கப்படும் மெட்ரோ சேவை! : ரூ.1,964 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு அரசு!
-
இஸ்லாமியர்களை புறக்கணிக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசு! : ஒன்றிய உள்துறையின் வெறுப்பு நடவடிக்கை!
-
விடுமுறைக்கு ஊருக்கு போறீங்களா?.. அப்போ உங்களுக்கான செய்திதான் இது!
-
TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு : இன்று வெளியான முக்கிய அறிவிப்பு இதோ!