India
கத்தி முனையில் வங்கியில் ரூ.8.54 லட்சம் கொள்ளை : பா.ஜ.க ஆட்சி செய்யும் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!
உத்தர பிரதேச மாநிலம் கோண்டா மாவட்டத்தில் கிராம வங்கி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில், தலையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் அங்கிருந்த அதிகாரியிடம் கத்தியை காட்டி மிரட்டியுள்ளார்.
பின்னர் வங்கியிலிருந்து ரூ.8.54 லட்சத்தை கொள்ளையடித்து விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இது குறித்து உடனே போலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறகு தனிப்படை அமைத்து மர்ம நபரை தேடும் பணியில் போலிஸார் ஈடுபட்டனர்.
இதையடுத்து சோதனை சாவடி ஒன்றில் போலிஸார் கொள்ளையனை சுட்டு பிடித்துள்ளனர். மேலும் கொள்ளையனிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறனர். இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கிறதா? என்பதும் குறித்தும் தீவிரமாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
வங்கியில் புகுந்து மர்ம நபர் கத்தியை காட்டி கொள்ளையடிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
Delimitation விவகாரம் : அமித் ஷாவைப் பார்த்து பயமா? – முதலமைச்சர் விஜய்க்கு தயாநிதி மாறன் MP கேள்வி!
-
ரேஷன் அரிசியை கொச்சைப்படுத்தலாமா? : அமைச்சர் செங்கோட்டையனுக்கு கடும் கண்டனம் தெரிவித்த எ.வ.வேலு!
-
அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகை விவகாரம் : த.வெ.க அரசுக்கு கோ.வி.செழியன் கேள்வி சரமாரி கேள்வி!
-
“ திமுக ஆட்சியில் நிதியுதவி கிடைத்த மாணவனுக்கு தவெக ஆட்சியில் கிடைக்காதது ஏன்?” : இ.பரந்தாமன் கேள்வி!
-
சிவகாசி பட்டாசு ஆலை ஆய்வுகள் : பேரவையில் தங்கம் தென்னரசு - அமைச்சர் கீர்த்தனா இடையே காரசார விவாதம்!