India
காணாமல் போன 70 செல்போன்கன் : உரிமையாளர்களிடம் ஒப்படைத்த போலிஸ் - நடந்தது என்ன?
புதுச்சேரி மாநிலத்தில் ஆன்லைன் மோசடிகள் தொடர்பாக சைபர் கிரைம் போலிஸார் வழக்குப்பதிவு செய்து மோசக்காரர்களிடம் இருந்து பணத்தை மீட்டு வருகின்றனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்திற்கான காசோலையை பயனாளிகளிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி கோரிமேடு பகுதியில் உள்ள சைபர் கிரைம் காவல் நிலையத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கலந்து கொண்டு பூமியான்பேட்டையை சேர்ந்து முருகன் என்பவருக்கு ரூ. 52 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார். இதேபோல் பொது இடங்களில் தவற விட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான 70 செல்போன்களை மீட்டு அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைத்தார்.
மேலும் புதுச்சேரியில் கடந்த 22-நாட்களில் மட்டும் ஆன்லைன் மூலம் 5 கோடி அளவில் பணத்தை இழந்ததாக 255 புகார்கள் பெறப்பட்டுள்ளது. எனவே இணையவழி மூலம் வரும் விளம்பரத்தை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!