India
ராகுல் காந்தியின் யாத்திரையை தடுக்க பார்க்கும் பாஜக அரசு : திட்டமிட்டபடி யாத்திரை தொடங்கும் - காங்கிரஸ்!
காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தைக் கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது. இந்த யாத்திரையின் போது லட்சக்கணக்கான பொதுமக்களை ராகுல் காந்தி சந்தித்தார்.
இந்த யாத்திரை காங்கிரசுக்கு மிகப்பெரும் எழுச்சியை ஏற்படுத்தியது. அதன் தொடர்ச்சியான இமாச்சல பிரதேசம், கர்நாடகா போன்ற இடங்களில் பாஜகவை காங்கிரஸ் வீழ்த்த முக்கிய காரணமாகவும் இருந்தது. அதோடு காங்கிரசுடன் சேராமல் இருந்த பிராந்திய காட்சிகளைக் காங்கிரஸோடு கூட்டணி வைக்கச் செய்யும் அளவு தாக்கத்தை ஏற்படுத்தியது.
இது எல்லாவற்றுக்கும் மேலாக இந்த யாத்திரை ராகுல் காந்தி மீதான பயத்தை பாஜகவுக்கும் மோடிக்கும் ஏற்படுத்தியது. இதன் வெற்றியைத் தொடர்ந்து ராகுல் காந்தி இரண்டாம் கட்டமாக ஜனவரி 14 ஆம் மணிப்பூர் மாநிலம் இம்பாலில் 'பாரத் ஜோடோ நீதி யாத்திரையை தொடங்குகிறார்.
இந்நிலையில் ராகுல் காந்தியின் யாத்திரைக்கு பாதுகாப்பு காரணங்களைக் காட்டி அம்மாநில பா.ஜ.க அரசு அனுமதி மறுத்துள்ளது. இருப்பினும், திட்டமிட்டபடி ராகுல் காந்தியின் யாத்திரை தொடங்கும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
மேலும் ராகுல் காந்தியின் யாத்திரையை கண்டு பா.ஜ.க அஞ்சுகிறது. இதனால் தான் யாத்திரைக்கு அனுமதி கொடுக்க மறுக்கிறது என்று காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.
Also Read
-
குளத்தில் குளிக்கச் சென்ற 4 சிறுவர்கள் : வீட்டில் இருந்த பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!
-
அயோத்தி ராமர் கோவில் அமைந்துள்ள தொகுதியை கைப்பற்றும் இந்தியா கூட்டணி : தரவுகள் கூறுவது என்ன ?
-
”நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.கவுக்கு மரண அடி விழப்போகிறது” : களநிலவரத்தை எடுத்து சொல்லும் பரகல பிரபாகர்!
-
தோனி இன்னும் இரண்டு ஆண்டுகள் IPL-ல் விளையாடுவார் - CSK பேட்டிங் பயிற்சியாளர் மைக் ஹஸ்ஸி கருத்து !
-
”பிரதமர் பதவிக்கு தகுதியற்றவர் நரேந்திர மோடி” : ரேபரேலி தொகுதியில் பிரியங்கா காந்தி ஆவேச பேச்சு!