India
பெற்றோர்களே உஷார் - குழந்தையின் மூக்கை கடித்த எலி : பிறந்து 40 நாட்களிலேயே நடந்த கொடூர துயரம்!
தெலங்கானா மாநிலம் நாகனூல் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவா. இவரது மனைவி கலா. இவர்களுக்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் இந்த தம்பதிக்குக் கடந்த 40 நாட்களுக்கு முன்புதான் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து குழந்தையுடன் கலா தனது தாய்வீட்டில் இருந்துள்ளார். அப்போது குழந்தையின் மூக்கில் எலி ஒன்று கடித்துள்ளது.
இதையடுத்து குழந்தையை அருகே இருந்த மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அங்குக் குழந்தைக்குச் சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்துள்ளனர்.
இந்நிலையில் மீண்டும் குழந்தையை எலி கடித்துள்ளது. இதனால் அவரது மூக்கிலிருந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்துள்ளது. பின்னர் உடனே ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் குழந்தைக்குச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
முழு கொள்ளளவை எட்டிய வைகை அணை... 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு !
-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய இஸ்ரேல்... மீண்டும் நடத்திய தாக்குதலில் 50க்கும் மேற்பட்டோர் பலி !
-
“தீபஒளியையொட்டி பேருந்துகள் மூலம் 7,88,240 பயணிகள் பயணம்!” : அமைச்சர் சிவசங்கர் தகவல்!
-
“வக்கற்ற ஆட்சி நடத்தியவர் காழ்ப்புணர்ச்சியுடன் அறிக்கை விடுவதா?”: பழனிசாமிக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
ஆணவப் படுகொலைகளுக்கு எதிரான சட்டம் - முதலமைச்சரின் மகத்தான அறிவிப்பு! : முரசொலி தலையங்கம் புகழாரம்!