India
3 புதிய குற்றவியல் மசோதாக்களுக்கு 4 நாட்களில் ஒப்புதல் : இதற்குதான் 146 எதிர்க்கட்சி MPக்கள் இடை நீக்கமா?
இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகிய 3 சட்டங்களுக்கு பதிலாக, முறையே பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா மற்றம் பாரதிய சாக்ஷியா ஆகிய 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மசோதாக்களுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து, நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. மசோதா மீதான விவாதம் நடக்க இருந்த நிலையில், மக்களவையில் எம்பிக்கள் பகுதிக்குள் 2 இளைஞர்கள் நுழைந்து புகை குண்டு வீசிய விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுதொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கம் அளிக்க வலியுறுத்தியதால், 146 எம்பிக்கள் இரு அவைகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 3 புதிய குற்றவியல் மசோதாக்கள் எதிர்ப்பின்றி நிறைவேற்றவே இத்தகைய நடவடிக்கை திட்டமிட்டு செய்யப்பட்டதாக எதிர்க்கட்சி எம்பிக்கள் குற்றம்சாட்டினர்.அதேபோல, எதிர்க்கட்சிகளே இல்லாமல் 3 குற்றவியல் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், குற்றவியல் மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார். மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட 4 நாட்களிலேயே குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். இதன்மூலம், பழைய சட்டங்களுக்கு பதிலாக புதிய சட்டங்கள் படிப்படியாக அமல்படுத்தப்பட உள்ளன.
Also Read
-
எகிப்தின் 70 நிமிட ஆதிக்கம்.. 13 நிமிடங்களில் விஸ்வரூபம் எடுத்த அர்ஜென்டினா : தொடர்கிறது மெஸ்ஸி மேஜிக்!
-
குறைதீர் முகாமில் தவெக அமைச்சர் ரமேஷ் முன் அடாவடி.. கேள்வி கேட்டவர் ஃபோனை பிடிங்கி விரட்டியடிப்பு!
-
‘வழக்கறிஞர்கள் நியமனத்தில் லஞ்சம்.. தவெக அமைச்சர்கள் மீது DVAC-க்கு பறந்த புகார் மனு’ : திமுக அதிரடி!
-
துணைவேந்தர் தேடல் குழுவில் ஆளுநரின் பிரதிநிதி… பாஜக-வுக்கு பணியும் தவெக : திமுக எம்.பி. வில்சன் கண்டனம்!
-
மக்களை மட்டுமல்ல யானைகளின் உயிரிழப்பை தடுத்தள்ள தி.மு.க- வின் தொலைநோக்கு திட்டம் : நடந்தது என்ன?