India
மக்களே உஷார்... வாட்டர் ஹீட்டரில் இருந்து வெளியேறிய வாயு... 6 மாத கர்ப்பிணிக்கு நேர்ந்த சோகம் !
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் அமைந்துள்ள சதாசிவ்நகரில் வசித்து வருபவர் ராமயா (23). இவரது கணவர் ஜெகதீஷ் அதே பகுதியில் காய்கறி வியாபாரம் செய்துவருகிறார். இந்த தம்பதிக்கு ஏற்கனவே 4 வயதில் ஆண் குழந்தை இருக்கும் நிலையில், ரம்யா 6 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்த சூழலில் சம்பவத்தன்று வழக்கம்போல், ஜெகதீஷ் வேளைக்கு சென்ற பின், ரம்யா வீட்டு வேலை மற்றும் குழந்தையை பார்த்துக்கொண்டிருந்தார்.
அப்போது தனது 4 வயது மகனை குளிக்க வைக்க குளியலறைக்குள் அவரை கூட்டிக்கொண்டு ரம்யா சென்றார். அந்த நேரத்தில் ஹீட்டர் ஆன் செய்து அதில் இருந்து வந்த தண்ணீரால் மகனை குளிப்பாட்டிக்கொண்டிருந்த நேரத்தில், திடீரென அதில் இருந்து கேஸ் ஒன்று வெளியேறியுள்ளது. இதனை சுவாசித்த சில நிமிடங்களில் மகன் சட்டென்று சரிந்து விழ, என்ன என்று சுதாரிப்பதற்குள் ரம்யாவும் சரிந்தார்.
இதையடுத்து எதேர்ச்சியாக வீட்டுக்கு வந்த ஜெகதீஸ், குளியறையில் தண்ணீர் சென்று கொண்டிருப்பதை கண்டு அங்கே சென்று பார்த்தபோது, மகன் மற்றும் மனைவி மயங்கி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் உதவியோடு அவர்களை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கே அவருக்கு சோதனை செய்ததில் 6 மாத கர்ப்பிணியான ரம்யா உயிரிழந்துவிட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்து மகனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து போலீசுக்கு அளிக்கப்பட்ட தகவலின்பேரில் விரைந்து வந்த அவர்கள், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது, "ஹீட்டரில் இருந்து வெளியேறும் கார்பன் மோனாக்சைடு என்ற வாயுவால்தான் ரம்யா உயிரிழப்புக்கு காரணம்". பொதுவாகவே ஹீட்டர் வாங்கும்போது மலிவான விலையில் கிடைக்கிறது என்று வாங்கக்கூடாது என்று பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட புதுமண தம்பதி, குளியறையில் ஹீட்டரால் பாதிக்கப்பட்டு உயிழந்து கிடந்தனர் என்பது கூடுதல் தகவல்.
Also Read
- 
	    
	      
SIR : பீகாரில் நடந்தது இங்கும் நடக்காது என்று உத்தரவாதம் தர தேர்தல் ஆணையம் தயாரா? - முரசொலி கேள்வி !
 - 
	    
	      
“ரூ.1,000 கோடி தொட்டது நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி நிதி!” : நன்றி தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
 - 
	    
	      
“4 ஆண்டுகளில் 19 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாக்களை வழங்கியுள்ளோம்!” : துணை முதலமைச்சர் பெருமிதம்!
 - 
	    
	      
”இவர்கள் குறை சொல்வது ஒன்றும் ஆச்சரியமில்லை” : ஜெயக்குமார் கருத்துக்கு அமைச்சர் சேகர்பாபு பதிலடி!
 - 
	    
	      
பீகார் மாநிலத்தை 20 ஆண்டாக வறுமையில் வைத்து இருக்கும் நிதிஷ்குமார் : மல்லிகார்ஜுன கார்கே தாக்கு!