India
வேகமாக வந்த ரயில் - தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட முதியவர் : அடுத்து நடந்த திக் திக் சம்பவம்!
குஜராத் மாநிலம் வாபி ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அதே தண்டவாளம் வழியாக வேகமாக விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த முதியவர் பதட்டத்துடன் இருந்துள்ளார்.
இதையடுத்து நடைமேடையிலிருந்த ரயில்வே காவலர் ஒருவர் இதைக் கவனித்த அடுத்த நிமிடமே கீழே இறங்கி முதியவரைத் தண்டவாளத்திலிருந்து இழுத்த, அடுத்த நிமிடமே இவர்கள் இருவரையும் ரயில் கடந்து சென்றது.
பிறகுத் தன் உயிரைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதியவர் உயிரைக் காப்பாற்றிய காவலருக்கு அங்கிருந்த பயணிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!