India
வேகமாக வந்த ரயில் - தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட முதியவர் : அடுத்து நடந்த திக் திக் சம்பவம்!
குஜராத் மாநிலம் வாபி ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அதே தண்டவாளம் வழியாக வேகமாக விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த முதியவர் பதட்டத்துடன் இருந்துள்ளார்.
இதையடுத்து நடைமேடையிலிருந்த ரயில்வே காவலர் ஒருவர் இதைக் கவனித்த அடுத்த நிமிடமே கீழே இறங்கி முதியவரைத் தண்டவாளத்திலிருந்து இழுத்த, அடுத்த நிமிடமே இவர்கள் இருவரையும் ரயில் கடந்து சென்றது.
பிறகுத் தன் உயிரைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படாமல் முதியவர் உயிரைக் காப்பாற்றிய காவலருக்கு அங்கிருந்த பயணிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
இனி பாதுகாப்பாக பயணம் செய்யலாம்... பொது மக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு திட்டம் விரைவில் அமல் !
-
சென்னை மெட்ரோவில் பயணம் செய்பவரா ? - ரயில் சேவை நேரத்தில் மாற்றம் செய்து மெட்ரோ ரயில் நிர்வாகம் உத்தரவு !
-
திருவள்ளுர் மாவட்டத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் இராதாகிருஷ்ணனுக்கு சிலை - துணை முதலமைச்சர் அறிவிப்பு!
-
நலிந்த கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி.. வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
அரசு கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை மாணாக்கர் சேர்க்கை... அமைச்சர் கோவி.செழியன் முக்கிய அறிவிப்பு!