India
மகள் திருமணத்திற்காக இரும்பு பெட்டியில் சேர்த்து வைத்த ரூ.2 லட்சம் : கறையானால் நேர்ந்த சோகம்!
ஆந்திரா மாநிலம், புத்தூரைச் சேர்ந்தவர் ஆதி மூலம் லட்சுமணா. விவசாயியான இவர் தனது மகளின் திருமணத்திற்காகச் சிறு சிறு இரும்பு வெட்டி ஒன்றில் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில் மகள் திருமணத்திற்காக எவ்வளவு பணம் சேர்ந்துள்ளது என்று எண்ணிப்பார்ப்பதற்காக இரும்புப் பெட்டியை எடுத்துத் திறந்து பார்த்துள்ளார். அப்போது பணத்தை கறையான்கள் அரித்து ஓட்டை ஓட்டையாக இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
பிறகு இரும்புப் பெட்டியிலிருந்த முழு பணத்தையும் கீழே கொட்டி பார்த்தபோது அதிலிருந்த அனைத்து பணமும் துண்டு துண்டாகச் சேதமாகி இருந்தது. மொத்தம் ரூ. 2 லட்சம் வரை சேர்த்து வைத்த பணத்தை கறையான்கள் அரித்து நாசமாக்கியதைப் பார்த்து ஆதி மூலத்தின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர்.
இது குறித்து ஆதி மூலம் லட்சுமணா, "இரும்புப் பெட்டியில் பணத்தைச் சேர்த்தால் அனைத்தும் கறையான் அரித்து நாசமாக்கிவிட்டது. என்னுடைய நிலையைக் கருதி தனது மகள் திருமணத்திற்கு அரசு உதவி செய்ய வேண்டும்" என வேதனையுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Also Read
-
5 பத்திரியாளர்களை கொலை செய்த இஸ்ரேல்... மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய கொடூரம் !
-
அமெரிக்க வரியால் பாதிக்கப்படும் திருப்பூர்... பிரதமர் அவசர நடவடிக்கை எடுக்கவேண்டும்: திருப்பூர் MP கடிதம்
-
நீலக்கொடி சான்றிதழ் பெற அழகுபடுத்தப்படும் தமிழ்நாட்டின் 6 கடற்கரைகள்: ரூ.24 கோடி ஒதுக்கிய தமிழ்நாடு அரசு!
-
“இந்திய மக்களுக்கு நீதி கிடைக்கும்! ஜனநாயகம் தழைக்கும்!”: பீகாரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை!
-
வாக்கு திருட்டு - பீகாரில் ராகுல் காந்தியுடன் கைகோர்த்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!