India
உடல்நலம் பாதித்த 70 வயது தாய் - சுடுகாட்டில் கைவிட்ட குடும்பம் : ஆந்திராவில் நடந்த கொடூரம்!
ஆந்திரா மாநிலத்திற்குட்பட்ட எரவுலபாடு கிராமத்தின் அருகே சுடுகாடு ஒன்று உள்ளது. இங்கு 70 வயது மதிக்கத்தக்க ஒரு மூதாட்டி உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில் ஆதரவற்று இருந்துள்ளார்.
இதைப் பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் மூதாட்டி எங்கிருந்து வந்தார் என்பது குறித்துக் கேட்டனர். அப்போது அவர் நான் அருகே இருக்கும் எரவுலபாடு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தனதுக்கு வயதாகிவிட்டதாலும் உடல்நிலை பாதிக்கப்பட்டுவிட்டதால் தனது மகன் வெங்கடேஷ் தன்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் கொடுமைப் படுத்தி வந்ததை அவர்களிடம் கூறியுள்ளார்.
இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் மூதாட்டி குறித்து அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்துள்ளனர். பிறகு அவர்கள் போலிஸாருக்கு தெரிவித்துள்ளனர். பிறகு அங்கு விரைந்து வந்த போலிஸார் மூதாட்டியை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்ந்தனர்.
பிறகு மூதாட்டியின் கணவர், மகன், மகள் ஆகியோரை போலிஸார் காவல் நிலையத்திற்கு அழைத்து எச்சரிக்கை செய்தனர். மேலும் அவர்களுக்கு கவுன்சிலிங்க கொடுக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Also Read
-
“முதலமைச்சர் செல்லும் இடமெல்லாம் மக்கள் வெள்ளத்தில் நீந்திச் செல்கிறார்!” : முரசொலி தலையங்கம்!
-
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற வருண், வாஷிங்டன் சுந்தர்… கையில் கொடுத்த ஆச்சரியப் பரிசு: முழு விவரம்!
-
மீண்டும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய ஓய்வறியாமல் உழைப்போம்: செல்வப்பெருந்தகை அழைப்பு!
-
‘நாம் தான் வெல்வோம்’ என்ற எண்ணத்தை எதிரிகளிடமும் ஏற்படுத்தியுள்ளோம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
-
சென்னை அண்ணா அறிவாலயத்தில் நாளை (மார்ச் 17) முதல் ‘தி.மு.க வேட்பாளர்கள் நேர்காணல்’! : முழு விவரம் உள்ளே!